செய்திகள் தமிழ் தொடர்புகள்
கொடைக்கானலில் இஸ்ரேலியர்களுக்கு 'துப்பாக்கி ஏந்திய' போலீஸ் பாதுகாப்பு
கொடைக்கானல்:
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான், இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வழக்கமாக டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் இஸ்ரேலியர்கள் அதிகளவில் வருகை தரும் கொடைக்கானல் பகுதியில், தற்போது 50-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் முகாமிட்டுள்ளனர்.
இவர்களின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாமல் இருக்க, தமிழக காவல்துறையினர், நக்சல் தடுப்புப் பிரிவு படையினர் நவீன ரக துப்பாக்கிகளுடன் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்வதேச அளவில் நிலவும் போர் சூழல் உள்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- முஸம்மில்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 9:32 pm
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்: திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு
April 29, 2026, 1:54 pm
பாவேந்தர் பாரதிதாசனின் 136-ஆவது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
April 28, 2026, 3:44 pm
மதுரை கயல்விழியைக் கரம்பிடித்த கைலாய மாப்பிள்ளை
April 27, 2026, 9:45 pm
புதுச்சேரியில் ஃபிரெஞ்சு மொழி நீக்கம்: ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு வைகோ கடும் கண்டனம்
April 27, 2026, 5:37 pm
திருச்சியில் பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளரை கட்டிப்போட்டு ஒரு கிலோ நகை கொள்ளை
April 27, 2026, 4:51 pm
சென்னை காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதும் மக்கள்
April 26, 2026, 10:02 pm
