செய்திகள் தமிழ் தொடர்புகள்
மருதமலை கோயில் வெள்ளி வேல் திருட்டு: தலைமறைவாக இருந்த சாமியார் கைது
கோவை:
கோவை மருதமலை கோயில் அடிவாரத்தில் வேல் கோட்டம் என்ற தனியாருக்குச் சொந்தமான மடம் ஒன்று உள்ளது. இங்கு இரண்டரை அடி உயரத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளியால் ஆன வேலை பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் மருதமலை கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
இதன் காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் மருதமலையில் குவிந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாமியார் வேடத்தில் வந்த நபர் வேல் கோட்டம் மடத்தில் இருந்து வெள்ளி வேலை திருடிச் சென்றார்.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார், வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர்.
இதையடுத்து பல்வேறு ஊர்களில் உள்ள மடத்திற்குச் சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்ற நபர் வெள்ளி வேலை திருடியது தெரியவந்தது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சாமியார் வெங்கடேஷ் சர்மாவை கைது செய்த போலீசார், அவரிடம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அவரை சிறையில் அடைத்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:18 pm
நாளை முதல் 6 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
December 6, 2025, 4:15 pm
இண்டிகோ விமானங்கள் ரத்து: சென்னையில் பயணிகள் போராட்டம்
December 2, 2025, 6:03 pm
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
November 30, 2025, 3:57 pm
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
November 30, 2025, 12:36 pm
மழைக்காலம் என்று பாராமல் எஸ்ஐஆர் பணிக்கு தள்ளப்பட்டுள்ள அதிகாரிகள்: கனிமொழி குற்றச்சாட்டு
November 29, 2025, 11:25 pm
கொழும்பு விமானநிலையத்தில் சிக்கித் தவிக்கும் சென்னைக்கு வர வேண்டிய 300 பயணிகள்
November 29, 2025, 3:05 pm
சென்னையை நோக்கி வரும் டிட்வா புயல்
November 28, 2025, 8:18 pm
பாம்பனில் புயல்: தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்
November 27, 2025, 2:17 pm
