செய்திகள் இந்தியா
பயணியின் நகையைத் திருடியதாக இண்டிகோ விமானப் பணிப்பெண்மீது புகார்
பெங்களூரு:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூருவுக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த ஐந்து வயதுச் சிறுமியிடமிருந்து 20 கிராம் தங்க நகையை விமானப் பணிப்பெண் திருடியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரியங்கா முகர்ஜி என்ற பெண், தனது இரு மகள்களுடன் சில நாள்களுக்கு முன்னர் இண்டிகோ விமானத்தில் பெங்களூரு நோக்கி பயணித்துள்ளார்.
அந்த விமானத்தின் பணிப்பெண்ணான அதிதி அஷ்வினி சர்மா, பிரியங்காவின் மூத்த மகளைக் கழிவறைக்கு அழைத்துசென்றார்.
திரும்பிவந்த போது, அச் சிறுமியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்தது. இந்நிலையில் அந்தப் பணிப்பெண் தன் குழந்தை அணிந்திருந்த தங்கச் சங்கிலியைத் திருடி விட்டதாக பிரியங்கா முகர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
“திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூருக்குச் சென்ற விமானத்தில் ஒரு ஊழியர் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியும். இதுபோன்ற விஷயங்களை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும் விசாரணைகளை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளித்து வருகிறோம்,” என இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 5:16 pm
ஆட்டோ ஓட்டி வாழ்வாதாரத்தை வெல்லும் வீர மங்கையர்கள்
March 20, 2026, 8:29 pm
வரலாறு காணாத ரூபாய் வீழ்ச்சி
March 20, 2026, 10:12 am
மேற்காசிய போர் சூழல் குறித்து மலேசிய பிரதமருடன் மோடி உரையாடல்
March 19, 2026, 10:18 pm
எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: இந்தியா கடும் எதிர்ப்பு
March 18, 2026, 5:29 pm
ஆந்திராவில் பரபரப்பு: காதலிக்கு எச்.ஐ.வி. பரப்பிய காதலன் கைது
March 18, 2026, 5:27 pm
திருநங்கை சட்டத்திருத்ததில் கடும் சர்ச்சை: மசோதாவிற்கு எதிராக பலர் எதிர்ப்பு
March 18, 2026, 4:48 pm
டாக்டர் வந்தனா கொலை வழக்கில் நீதி நிலைநிறுத்தப்பட்டது
March 18, 2026, 3:05 pm
