
செய்திகள் இந்தியா
பயணியின் நகையைத் திருடியதாக இண்டிகோ விமானப் பணிப்பெண்மீது புகார்
பெங்களூரு:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூருவுக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த ஐந்து வயதுச் சிறுமியிடமிருந்து 20 கிராம் தங்க நகையை விமானப் பணிப்பெண் திருடியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரியங்கா முகர்ஜி என்ற பெண், தனது இரு மகள்களுடன் சில நாள்களுக்கு முன்னர் இண்டிகோ விமானத்தில் பெங்களூரு நோக்கி பயணித்துள்ளார்.
அந்த விமானத்தின் பணிப்பெண்ணான அதிதி அஷ்வினி சர்மா, பிரியங்காவின் மூத்த மகளைக் கழிவறைக்கு அழைத்துசென்றார்.
திரும்பிவந்த போது, அச் சிறுமியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்தது. இந்நிலையில் அந்தப் பணிப்பெண் தன் குழந்தை அணிந்திருந்த தங்கச் சங்கிலியைத் திருடி விட்டதாக பிரியங்கா முகர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
“திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூருக்குச் சென்ற விமானத்தில் ஒரு ஊழியர் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியும். இதுபோன்ற விஷயங்களை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும் விசாரணைகளை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளித்து வருகிறோம்,” என இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2025, 5:32 pm
இத்தாலியின் துணைப்பிரதமர் நாளை இந்தியாவிற்கு வருகை புரிகிறார்
April 9, 2025, 11:01 am
காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் 93-ஆவது வயதில் காலமானார்
April 7, 2025, 10:50 am
ஊழியர்களை சங்கிலியால் கட்டி நாய் போல நடக்க வைத்து, தரையை நக்க வைத்த கொடூரம்
April 6, 2025, 7:01 pm
டெல்லி பொழுதுபோக்கு பூங்காவின் ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலி
April 6, 2025, 10:07 am
மரக்கட்டிலைக் காராக்கிய இந்திய ஆடவர்
April 5, 2025, 10:10 am
மியன்மாரில் நிரந்தர போர்நிறுத்தம் அவசியமாகும்: இந்தியா வலியுறுத்தல்
April 3, 2025, 6:40 pm
வஃக்பு மசோதா மோசடியானது; அரசியல் சாசனத்திற்கு எதிரானது: மாநிலங்களவையில் திருச்சி சிவா
April 3, 2025, 6:17 pm