
செய்திகள் இந்தியா
பயணியின் நகையைத் திருடியதாக இண்டிகோ விமானப் பணிப்பெண்மீது புகார்
பெங்களூரு:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூருவுக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த ஐந்து வயதுச் சிறுமியிடமிருந்து 20 கிராம் தங்க நகையை விமானப் பணிப்பெண் திருடியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரியங்கா முகர்ஜி என்ற பெண், தனது இரு மகள்களுடன் சில நாள்களுக்கு முன்னர் இண்டிகோ விமானத்தில் பெங்களூரு நோக்கி பயணித்துள்ளார்.
அந்த விமானத்தின் பணிப்பெண்ணான அதிதி அஷ்வினி சர்மா, பிரியங்காவின் மூத்த மகளைக் கழிவறைக்கு அழைத்துசென்றார்.
திரும்பிவந்த போது, அச் சிறுமியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்தது. இந்நிலையில் அந்தப் பணிப்பெண் தன் குழந்தை அணிந்திருந்த தங்கச் சங்கிலியைத் திருடி விட்டதாக பிரியங்கா முகர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
“திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூருக்குச் சென்ற விமானத்தில் ஒரு ஊழியர் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியும். இதுபோன்ற விஷயங்களை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும் விசாரணைகளை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளித்து வருகிறோம்,” என இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am