நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய தேசிய லீக்: அரையிறுதியில் போர்த்துகல்

லிஸ்பன்:

ஐரோப்பிய தேசிய லீக் கால்பந்து போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு போர்த்துகல் அணியினர் முன்னேறி உள்ளனர்.

ஜோஸ் அல்வார்ட் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் டென்மார்க் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போர்த்துகல் அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

போர்த்துகல் அணியின் வெற்றி கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரான்சிஸ்கோ திரின்கோ, கோன்சாலோ ரமோஸ் ஆகியோர் அடித்தனர்.

இரு ஆட்டங்களின் முடிவில் 5-3 என்ற மொத்த கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்த்துகல் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் 5-4 என்ற மொத்த கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

பெல்ஜியம் அணியினர் 4-3 என்ற மொத்த கோல் கணக்கில் உக்ரைன் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset