நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின்  இறுதியாட்டம்: ஏப்ரல் 26ஆம் தேதிக்கு மாற்றம் 

கோலாலம்பூர்: 

மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டம் எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறும் என்று MFL புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது 

இதற்கு முன் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த இறுதியாட்டம் தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது 

MFL அமைப்பின் இந்த அறிவிப்பானது இரு அணிகளின் ரசிகர்களும் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட முடியும் என்று ஶ்ரீ பகாங் எஃப் சியின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முஹம்மத் சுஃபியான் கூறினார் 

இந்த புதிய தேதி மாற்றத்திற்கு தாம் ஆதரவு அளிப்பதாக டத்தோ முஹம்மத் சுஃபியான் தெரிவித்தார் 

மேலும், ஏப்ரல் 12ஆம் தேதி என்பது பெருநாள் காலக்கட்டம் என்பதால் இந்த தேதி மாற்றப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார் 

மலேசிய கிண்ண இறுதியாட்டம் எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜொகூர் டாருல் தக்ஸிம் அணியும் ஶ்ரீ பகாங் அணியும் இறுதியாட்டத்தில் விளையாடவுள்ளன

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset