
செய்திகள் மலேசியா
சிறந்த முதலாளிகளை அங்கீகரிக்கவே எச்ஆர்டி கோர்ப்பின் பென் திட்டம் அறிமுகம்: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
நாட்டில் சிறந்த முதலாளிகளை அங்கீகரிக்க எச்ஆர்டி கோர்ப் வாயிலாக பென் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
மிகவும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதை ஒரு வணிகச் செலவாகக் கருதக்கூடாது.
மாறாக புதுமை, உற்பத்தித் திறன், பொருளாதார வளர்ச்சியை இயக்கும் முதலீடாகக் கருத வேண்டும்.
வணிகங்கள் லாபத்திற்காக மட்டுமே உருவாக்கப்படுவதில்லை. மாறாக மனித வளங்களால் இயக்கப்படுகின்றன.
எனவே சிறந்த முதலாளிகளை அங்கீகரிப்பதற்காக பிரிமியர் எம்ப்ளாயர்ஸ் நெட்வொர்க் (PEN) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு முதலாளியாக, உங்கள் பங்கு வேலை உருவாக்கத்திற்கு அப்பாற்பட்டது நீங்கள் மலேசியாவின் எதிர்கால பணியாளர்களை உருவாக்கும் சிற்பிகள்.
திறமையை வளர்ப்பதற்கான உங்கள் திறன் மலேசியாவின் பொருளாதார மீள்தன்மை, உலகளாவிய போட்டித்தன்மையை தீர்மானிக்கும்.
இன்று தலைநகரில் நடந்த பென் திட்டத்தின் அறிமுக விழாவில் தனது உரையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவரது உரையை மனிதவள அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசோப் வாசித்தார்.
எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2025, 10:23 am
ஹோட்டலில் காதலனுடன் தனியாக இருந்த அடுத்தவரின் மனைவி பிடிப்பட்டார்
March 18, 2025, 10:22 am
ஜசெக தேர்தல் முடிவுகளுக்கும் அமைச்சரவைப் பதவிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: அந்தோனி லோக்
March 18, 2025, 10:21 am
வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம்: மலேசியாவிலும் உணரப்பட்டது
March 18, 2025, 10:20 am
ஐஜிபி டான்ஶ்ரீ ரசாருடினின் இடைத்தை நிரப்ப அயோப் கான் முதன்மை தேர்வாக உள்ளார்
March 18, 2025, 10:18 am
இஸ்மாயில் சப்ரி வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் எம்ஏசிசி விசாரிக்கும்: அசாம் பாக்கி
March 18, 2025, 10:17 am
பிரதமரின் பதவிக் கால வரம்பை இன அரசியலுக்கான பொருளாக மாற்ற வேண்டாம்: பிரதமர்
March 17, 2025, 11:46 pm