
செய்திகள் உலகம்
அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 200க்கும் அதிகமான கள்ளக்குடியேறிகள்
நியூயார்க்:
அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 200க்கும் அதிகமான வெனிசுவெலா (Venezuela) குடிமக்கள் எல் செல்வடோர் (El Salvador) சென்று சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கள்ளக்குடியேறிகள் ஆவர்,
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) வார இறுதியில் 18 ஆம் நூற்றாண்டுப் போர்க்காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அது வெனிசுவெலா நாட்டவர்களை வெளியேற்ற வழியமைத்தது.
டிரம்ப் நிர்வாகம் அவர்களை வெளியேற்றக் கூடாது என்று அமெரிக்க நீதிபதி உத்தரவிட்ட சில மணி நேரத்தில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வெனிசுவெலா குற்றக் கும்பல் உறுப்பினர்கள் 238 பேரும், MS-13 குற்றக் கும்பல் உறுப்பினர்கள் 13 பேரும் வந்து சேர்ந்ததை எல் செல்வடோர் அதிபர் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட அனைவரும் ஓராண்டுக்கு பயங்கரவாதத் தடுப்பு நிலையத்தில் வைக்கப்படுவர். அவர்கள் அங்கிருக்கும் காலம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று எல் செல்வடோர் அதிபர் சொன்னார்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 10:32 am
விமான பணிப் பெண்களிடம் பாலியல் சீண்டல்: அதிரடியாக கைது செய்யப்பட்ட பயணி
March 16, 2025, 6:41 pm
இலங்கை அதிபர் ஏற்பாடு செய்த நோன்பு திறப்பு நிகழ்வு
March 15, 2025, 11:55 am
கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார்
March 15, 2025, 10:55 am
பாகிஸ்தான் லாகூர் விமான நிலையத்தில் சக்கரம் இல்லாமல் விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு
March 15, 2025, 10:54 am
கால்சட்டையில் ஆமையை மறைத்து வைத்த பயணி
March 14, 2025, 1:38 pm
உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை தெரிவு
March 14, 2025, 12:35 pm
தீப்பிடித்து எரிந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தால் பரபரப்பு
March 14, 2025, 12:32 pm