
செய்திகள் கலைகள்
தற்கொலைக்கு முயற்சித்த பின்னணி பாடகி கல்பனா மருத்துவமனையில் அனுமதி: போலீஸ் விசாரணை தொடங்கியது
ஹைதராபாத் -
பிரபல பின்னணி பாடகி கல்பனா (44) தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் அவசர நிலையில் சுயநினைவிழந்து கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடிய கல்பனா, தனது திறமையால் பரந்த ரசிகர் மன்றத்தை கொண்டிருந்தார்.
என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமான அவர், பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் கல்பனாவின் நிலைமை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
March 9, 2025, 5:32 pm
தனது மும்பை வீடுகளை ரூ.13 கோடிக்கு விற்ற நடிகை பிரியங்கா சோப்ரா
March 6, 2025, 11:49 am
இசைஞானி இளையராஜா தலைமையில் லண்டனில் முதல் சிம்போனி அரங்கேற்றம்
March 5, 2025, 2:21 pm
LADY SUPERSTAR என்று தன்னை அழைக்க வேண்டாம்: நடிகை நயன்தாரா அறிக்கை
March 4, 2025, 3:39 pm
கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிக்கும் தெலுங்கு படம்
March 4, 2025, 3:32 pm