நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியிலிருந்து வெளியேறியது மென்செஸ்டர் யுனைடெட்

லண்டன்:

எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியிலிருந்து மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெளியேறியுள்ளனர்.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனடெட் அணியினர் புல்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டனர்.

இதனை தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெனால்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-4 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியிடம் தோல்வி கண்டு வெளியேறினர்.

எப்ஏ நடப்பு சாம்பியன் அணியான மென்செஸ்டர் யுனைடெட் அணியின் இவ்வாட்டத்தை விட்டு வெளியேறியது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

மற்றொரு ஆட்டத்தில் பிரிக்டோன் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset