நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ணம் காலிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி

லண்டன்:

இங்கிலாந்து எப்ஏ கிண்ணம் காலிறுதி ஆட்டத்திற்கு மென்செஸ்டர் சிட்டி அணியினர் முன்னேறி உள்ளனர்.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் பிலேமௌத் அர்க்லே அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் பிலேமௌத் அர்க்லே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணிக்காக நிகோ ஓ ரெய்லி இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை கெவின் டி புருனே அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் கிறிஸ்டல் பேல்ஸ் அணியினர் 3-1 மில்வால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் பிரெஸ்டன், ஏஎப்சி போர்னமௌத் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset