 
 செய்திகள் மலேசியா
இடைநிலைப் பள்ளிகளில் தமிழ், தமிழ் இலக்கிய பாடங்களுக்கு எச்சரிக்கை மணி: குணராஜ்
கிள்ளான்:
இடைநிலைப் பள்ளிகளில் தமிழ், தமிழ் இலக்கிய பாடங்களுக்கு மிகப் பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை மணியை தொடர்ந்து சமுதாய மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் வலியுறுத்தினார்.
கிள்ளான் ராஜா மஹாடி இடைநிலைப் பள்ளியில் தமிழ், தமிழ் இலக்கிய பாட நேரம் மாற்றப்பட்டது பெரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவாகரத்திற்குச் சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் பள்ளி நிர்வாகத்தை சந்தித்தேன்.
அப்போது இந்த பள்ளியில் தமிழ், தமிழ் இலக்கிய பாடங்களை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை ஆசிரியர்கள் என்னிடம் கூறினர்.
அந்த எண்ணிக்கை எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிள்ளான் வட்டாரத்தில் அதிகமான இந்திய மாணவர்கள் பயிலும் இடைநிலைப் பள்ளியாக ராஜா மஹாடி விளங்குகிறது.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நூறு அல்லது அதற்கு குறைவான மாணவர்கள் மட்டுமே தமிழ் மொழி, தமிழ் இலக்கிய பாடங்களை பயில்கின்றனர்.
இந்நிலை நீடித்தால் தமிழ், தமிழ் இலக்கிய பாடங்களைப் பயில மாணவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் போய்விடும்.
இதனால் இந்த படங்களை அகற்றி விடலாம் என்ற கோரிக்கைகளும் எழலாம்.
வரும் காலங்களில் இடைநிலைப் பள்ளிகளில் இந்த இரு பாடங்களையும் நீக்குவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஆகவே, இடைநிலை பள்ளிகளில் தமிழ், தமிழ் இலக்கிய பாடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக தமிழ் பள்ளிகளில் இருந்து செல்ல மாணவர்கள் கட்டாயம் தமிழ் மொழியை பாடமாக தேர்வு செய்ய வேண்டும். இதனைப் பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று குணராஜ் வலியுறுத்தினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2025, 6:58 am
6ஆவது தலைமுறையினருக்கு ஓஐசி அட்டை நீட்டிக்கப்பட்டுள்ளது: இந்திய தூதரகம் அறிவிப்பு
October 30, 2025, 10:04 pm
அமெரிக்காவை மகிழ்விக்க அரசாங்கம் இறையாண்மையை விற்பனை செய்வதாக மகாதிர் குற்றம் சாட்டுகிறார்
October 30, 2025, 10:02 pm
மொஹைதின் மருமகனை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வர போலிசாருக்கு புதிய தடயங்கள் கிடைத்துள்ளன: சைபுடின்
October 30, 2025, 10:01 pm
புரோட்டானின் மலிவு விலை மின்சார இ.மாஸ் 5 கார் அறிமுகம்: விலை 60,000 ரிங்கிட்டுக்கும் கீழ் தொடங்குகிறது
October 30, 2025, 9:59 pm
தீபாவளியை கொண்டாடுவது மட்டுமல்லாமல் சமூக மட்டத்தில் நட்புறவை வலுப்படுத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 30, 2025, 9:58 pm
செராஸ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு ஹெல்மட்: துணையமைச்சர் சரஸ்வதி வழங்கினார்
October 30, 2025, 8:13 pm
டத்தோ விடாவுக்குச் சொந்தமான 3 கார்கள் உட்பட 727 உடைமைகள் 1 மில்லியன் ரிங்கிட்டிற்கு ஏலம் விடப்பட்டன
October 30, 2025, 8:12 pm
பெர்சத்துவில் மேலும் 3 தொகுதித் தலைவர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
October 30, 2025, 8:11 pm
ஆசியான் வட்டார நாடுகளுடனான மலேசியாவின் உறவுகளை உச்ச நிலை மாநாடு வலுப்படுத்தியுள்ளது
October 30, 2025, 8:10 pm

 
  
  
  
  
  
  
  
  
  
  
  
 