
செய்திகள் விளையாட்டு
ICC சாம்பியன்ஸ் டிராபி: நாளை துபாயில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன
துபாய்:
8 அணிகள் பங்கேற்றுள்ள 9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கிறது.
அதன்படி நாளை துபாயில் நடைபெறும் 5வது லீக் போட்டியில் ஏ பிரிவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதுவதில் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய நிலையில் நாளையும் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம்.
ஆனால் வங்கதேசத்திடம் போராடி தான் வெற்றி பெற முடிந்தது. பேட்டிங்கில் சுப்மன் கில் முதுகெலும்பாக உள்ளார். அவர் கடைசி 4 போட்டியிலும் 2 சதம், 2 அரைசதம் விளாசி சூப்பர் பார்மில் உள்ளார்.
ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. விராட் கோஹ்லி இன்னும் 15 ரன் எடுத்தால் ஒருநாள் போட்டியில் 14 ஆயிரம் ரன் இலக்கை தொடுவார்.
வங்கதேசத்துடன் வேகத்தில் முஹம்மது ஷமி 5 விக்கெட் வீழ்த்தியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஹர்சித் ரானாவும் தனது பங்கிற்கு 3 விக்கெட் எடுத்தார். இதனால் அவர் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ளலாம்.
வங்கதேசத்துடன் ஒரு விக்கெட்டும் எடுக்காத குல்தீப் யாதவுக்கு பதில் நாளை வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
மறுபுறம் முஹம்மது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்ததால் இந்த போட்டியிலும் தோற்றால் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிடும். இதனால் வாழ்வா, சாவா நெருக்கடியில் களம் காண்கிறது.
பகார் ஜமான் காயத்தால் விலகிய நிலையில், இமாம்-உல்-ஹக் சேர்க்கப்பட்டுள்ளார். பாபர் அசாம், சல்மான் ஆகா குஷ்தில் ஷா ஆகியோர் ரன் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வேகத்தில் ஷாகின் ஷா அப்ரிடி, நதீம் ஷா, ஹாரிஸ் ரவூப் வேகத்தில் மிரட்டினாலும் ரன்களை வாரி வழங்குகின்றனர். தரமான சுழற்பந்து வீச்சாளர் இல்லாததும் பாகிஸ்தான் அநியாய குறை தான். பீல்டிங்கும் படுமோசமாக உள்ளது.
வலுவான இந்தியாவை வீழ்த்தவேண்டுமெனில் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். நாளை மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற உள்ளது.
எங்களுக்கு நெருக்கடி இல்லை
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் கூறுகையில், “எங்களுக்கு கொஞ்சம் கூட நெருக்கடி கிடையாது. அனைவரும் ரிலாக்ஸ் ஆக இருக்கின்றோம். மற்ற போட்டியை போல் தான் இந்தியாவை எதிர்கொள்வோம். அனைத்து வீரர்களும் பாசிட்டிவாக உள்ளனர். எங்கள் அதிகபட்ச செயல் திறனை வெளிப்படுத்துவோம்.
துபாயில் டி.20 போட்டியில் இந்தியாவை 2 முறை ஏற்கனவே வீழ்த்தி இருக்கிறோம். அதேபோல் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவோம். வீரர்கள் அனைவரும் நல்ல நம்பிக்கையில் உள்ளனர். எனவே இந்த போட்டி நல்லபடியாக அமையும். பாகிஸ்தான் அணிக்கு துபாயில் நல்ல ரெகார்ட் இருக்கிறது’’ என்றார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am