செய்திகள் சிந்தனைகள்
நீரென்ன குழப்பவாதியா? - வெள்ளிச் சிந்தனை
முஆத் இப்னு ஜபல் (ரலி) தம் சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கி தொழவைக்கும்போது நீண்ட அத்தியாயத்தை ஓதினார். அப்போது அவருக்குப் பின்னால் தொழுதுகொண்டிருந்த ஒருவர், தொழுகையிலிருந்து விலகி தனியாகத் தொழுதார்.
முஆத் (ரலி) அவரை நயவஞ்சகர் என்றார். அதைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர், நபிகளாரிடம் சென்று கண்ணீர் மல்க முறையிட்டார்.
முஆத் (ரலி) அவர்களிடம் விசாரித்த நபிகளார், "நீரென்ன குழப்பவாதியா?'' என்று மூன்று முறை கேட்டார்கள். தொழுகையில் நடுத்தரமான அத்தியாயங்களை ஓதுமாறு பணித்தார்கள்.
பின்னர் நடைபெற்ற ஒரு போரில், "நான் யார் என்பதை இப்போது முஆத் தெரிந்துகொள்வார்'' என்று கூறியவாறே நபி (ஸல்) அவர்களுடன் அவரும் அந்தப் போரில் கலந்துகொண்டு வீராவேசமாகப் போரிட்டார். ஷஹீதானார்.
போர் முடிந்தபின் முஆத் (ரலி) அவர்களிடம் நபிகளார், "உம்மைக் குறித்து என்னிடம் புகார் தெரிவித்த அந்த சகோதரர் எங்கே?'' என்று கேட்டார்கள்.
முஆத் (ரலி): "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் அவர் உண்மையாளராக இருந்தார். நான்தான் அவரைத் தவறாகக் கருதிவிட்டேன். அவர் ஷஹீதாகிவிட்டார்''. (புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)
முஆத் (ரலி) அவர்களால் நயவஞ்சகர் என்று கூறப்பட்ட அந்த நபித்தோழர், நபி (ஸல்) அவர்களுடைய தலைமையில் போரிட்டு, ஷஹீத் எனும் உயர் அந்தஸ்தை பெற்றார்.
ஒருவரை எடைபோடும் விஷயத்தில் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.
ஒருவர் எந்த எண்ணத்தில் செயல்படுகிறார் என்பதையும் அவர் நேர்வழியில் இருக்கிறாரா? வழிகேட்டில் இருக்கிறாரா? என்பதையும் அல்லாஹ் மட்டுமே அறிவான். இது நம் அனைவருக்கும் தெரியும்.
"வழி தவறியவர் யார், நேர்வழியில் இருப்பவர் யார் என்பதை நிச்சயமாக உமது இறைவனே நன்கு அறிபவனாக இருக்கிறான்” (6:117)
ஆயினும் மனிதர்களை சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் பிரித்து அனுப்பும் வேலையை இன்னும் பலர் இங்கே மும்முரமாக செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
நாங்கள் மட்டுமே நேர்வழியில் இருக்கிறோம். மீதி எல்லோரும் தவறான வழியில் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய அபத்த சிந்தனை.
மனிதர்களை எவ்வாறேனும் நேர்வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் நபி (ஸல்) கண்ணும் கருத்துமாக செயல்பட்டார்கள்.
ஆனால் இங்கே சிலர், அவர்களை வழிகேடர்களாக முத்திரை குத்துவதில் கண்ணும் கருத்துமாக செயல்படுகிறார்கள். காலக் கொடுமை!
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
April 25, 2026, 11:42 am
ஈரானில் மழை பெய்யாமல் மேகங்களை மறைத்து பஞ்சம் கொண்டு வந்த இஸ்ரேலும் அதனைத் தகர்த்த ஈரானும்
April 24, 2026, 7:50 am
வேர் சரியாக இருந்தால் மட்டுமே மரம் நிலைத்து நிற்கும் - வெள்ளிச் சிந்தனை
April 19, 2026, 10:55 pm
தமிழக தேர்தல் களம்: த வெ க வேட்பாளர்கள் வழிகாட்டுதலின்றி தவிக்கும் அவல நிலை
April 18, 2026, 6:27 pm
இதுவரை நடந்தது போதும் - Enough is enough: இஸ்ரேல் மீது டிரம்ப் பாய்ச்சல்
April 17, 2026, 8:11 am
சுய திருப்தியும், தற்பெருமையும் மோசமான குணங்கள் - வெள்ளிச் சிந்தனை
April 16, 2026, 9:55 pm
பிரிட்டனை ஆபத்து நெருங்குகிறதா? - ஓர் அரசியல் பார்வை
April 12, 2026, 12:12 pm
இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் இன்றி முறிந்தது
April 10, 2026, 9:11 am
புன்னகைக்க மறக்காதீர்கள்: வெள்ளிச் சிந்தனை
April 8, 2026, 9:29 pm
