நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

சிலர், பலராய் ஆகின்ற நாள் வரவே வேண்டும்; வேண்டும் - பாதாசன்

இப்பொழுது நிம்மதியா உங்க ளுக்கே ?
       ஏ,தமிழ இனத்தீரே ... இந்த ஆண்டில்
எப்பொழுதும் இல்லாத அளவாய் ... ஐயோ...
    இங்குள்ள மாணவர்கள் தமிழ்ப்பள் ளிக்கே
தப்பாமல் போதல்பெருங் குற்றம் என்று
    தவறாக எண்ணியதைக் குறைத்தே விட்டார் !
செப்பிடவோ நா,நாணிக் கூச்சம் கொள்ளும் !
     செந்தமிழ்த்தா யைமானம் குத்திக் கொல்லும் !
அப்படியா சேதி,எனக் கேட்டு விட்டே
     அமைதிகொண்டார் தமிழ்ப்பெற்றோர் சீச்சீ... வெட்கம் !

அற்றைநாள் தமிழ்ப்பள்ளி களைப்போல் இன்றும்
      அவலமுடன் தமிழ்ப்பள்ளி இருக்கும் என்றே
ஒற்றைக்கண் பார்வைசெய்த முடிவும் தப்பே !
       உலகளவில் அறிவியலில் இற்றை நாளில்
மற்றவரைப் போட்டியிலே  வெற்றி கண்டு
      வகைவகையாய்ப் பரிசுபல பெற்றே வந்து
உற்றவரின் - நம்நாட்டின் புகழு யர்த்தும்
     உயர்தமிழப் பள்ளிகளை வெறுத்தல் நன்றா ?

மாணவர்கள், ஆசிரியர், தமிழப் பள்ளி
      மற்றெதிலும் ஒருகுறையும் இல்லை ; ஆனால்
மாணவர்தம் பெற்றோர்கள் தாமே என்றும்
     மதில்பூனை யாயிருந்து சொந்தப் பிள்ளை
மாணவரைத் தமிழ்ப்பள்ளிக்(கு) அனுப்பி டாமல்
      மடமையிலே இருக்கின்றார்  ; திருந்தா ராமோ ?
போனவரை போகட்டும் ! இனிமே லேனும்
      புத்தியுடன் தமிழ்ப்பள்ளிக்(கு)  அனுப்பி டட்டும் !

உலகளவில் அவரவர்,தம் தாய்மொ ழிக்கே
       உயர்மதிப்பைத் தருவதுடன் கற்கின் றார்கள் !
உலகளவில் முதல்மூப்புத் தமிழ்மொ ழிக்கே
      உரியவராய் இருக்கின்ற தமிழ மக்கள்
பலர்,தமிழைப் படிப்பதில்லை ; வெறுப்ப தோடு
      பகடிசெய்தும் தம்மொழியைப் பழிக்கின் றார்கள் ;
சிலர்மட்டும் தமிழ்கற்றுப் பேணு கின்றார் !
சிலர்,பலராய் ஆகும்நாள் வரவே வேண்டும் !

- பாதாசன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset