நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரளான பக்தர்களின் வருகையே பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றிக்கான காரணம்: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

திரளான பக்தர்களின் வருகையே பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றிக்கான முக்கிய காரணமாக உள்ளது:

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு புறப்பட்ட வெள்ளி ரதம் 22 மணி நேரத்திற்கு பின் பத்துமலையை வந்தடைந்தது.

இதனால் அடுத்த ஆண்டு இரவு 7 மணிக்கு எல்லாம் வெள்ளி இரத ஒரு வருடத்தை ஆரம்பிக்கலாம் என்ற திட்டத்தை தேவஸ்தானம் கொண்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வெள்ளிரத ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

பத்துமலையில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை தொடர்ந்து பூர்த்தி செய்து வருகின்றனர்.

குறிப்பாக மில்லியன் கணக்கான மக்கள் இந்த தைப்பூச விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

பக்தர்கள் ஏந்தி வரும் காவடிகளை காண வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்துள்ளனர்.

இதுதான் பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றியாகும்.

இந்த வெற்றியை தரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் தொடர்ந்து தங்கள் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் என்று டான்ஸ்ரீ நடராஜா செய்தியாளர்களின் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset