
செய்திகள் இந்தியா
40 அடி கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி
கொச்சி:
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த கணவரை அவரது மனைவி காப்பாற்றியுள்ளார்.
பிரவம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷன் மரத்தில் மிளகு பறித்துக் கொண்டிருந்தபோது திடீரென மரத்தின் கிளை முறிந்து கிணற்றில் விழுந்தார்.
கணவர் கிணற்றுக்குள் விழுந்ததைப் பார்த்த அவரது மனைவி பத்மம் கயிற்றைப் பிடித்து கிணற்றில் இறங்கியுள்ளார்.
கிணற்றில் விழுந்த அதிர்ச்சியில் சுயநினைவை இழந்துள்ளார்.
கணவர் நீரில் மூழ்காமல் பத்மம் தாங்கி பிடித்து கொண்டிருந்தார். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தம்பதியை மீட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2025, 11:30 am
வட மாநிலங்களில் ஹோலி – ரமலான் ஜூம்ஆ தொழுகை அமைதியாக நடந்து முடிந்தது
March 15, 2025, 10:42 am
ஹோலி பண்டிகையில் கஞ்சா ஐஸ்கிரீம் விற்பனை
March 14, 2025, 1:50 pm
டெல்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது
March 11, 2025, 10:01 am
கேரளாவில் யூடியூப் காணொலி பார்த்து டயட் செய்த இளம் பெண் உயிரிழப்பு
March 11, 2025, 9:56 am
சமஸ்கிருதம்தான் தமிழைவிட பழைமையானது: பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே
March 10, 2025, 1:23 pm