செய்திகள் மலேசியா
தமிழ் ஆசிரியர்களின் எழுத்து படைப்புகளை புத்தகமாக குயில் ஜெயபக்தி நிறுவனம் வெளியிடும்
கோலாலம்பூர்:
மலேசிய திருநாட்டில் புதிய தமிழ் எழுத்தாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்.
குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் எழுத்து துறையில் அதிக அளவில் முத்திரை பதிக்க வேண்டும்.
தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களின் எழுத்து படைப்புகளை புத்தகமாக வெளியிட குயில் ஜெயபக்தி நிறுவனம் முன் வருகிறது.
ஆகவே தரமான படைப்புகளை படைக்க ஆசிரியர்கள் முன் வர வேண்டும் என்று டத்தோ கு. செல்வராஜ் கேட்டுக் கொண்டார்.
புத்தகம் எழுதினால் என்ன கிடைக்கும் என்று பாராமல் உங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ள முன் வாருங்கள்.
வாசிக்கும் சமுதாயத்தை உருவாக்க முடிந்தால் புத்தக விற்பனையும் அதிகரிக்கும்.
நாளும் தெரிய நாளும் படிப்போம், வாசிப்பு நமது சுவாசிப்பு என்ற தாராக மந்திரத்தோடு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் குயில் ஜெயபக்தி நிறுவனம் இன்றும் தமிழுக்கு சேவையாற்றி வருகிறது.
எழுத்துத் துறையில் புதிய எழுத்தாளர்களாக உருவாகி இருக்கும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் புத்தக அறிமுக விழாவும் பாராட்டும் விழாவும் இன்று குயில் ஜெயபக்தி மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 22, 2025, 10:03 pm
கிளந்தானில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று முதல் கடுமையான மழை பெய்யும்: மெட் மலேசியா எச்சரிக்கை
November 22, 2025, 2:09 pm
நீர் மட்டம் உயர்கிறது; உணவுப் பொருட்கள் தீர்ந்து போகின்றன: ஹட்யாய் வெள்ளத்தில் சிக்கியுள்ள மலேசியர்கள்
November 22, 2025, 2:08 pm
கம்போடியாவில் கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாடு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
November 22, 2025, 2:08 pm
தாயார் இந்திரா காந்தியிடம் மகள் பிரசன்னாவை ஒப்படையுங்கள்: மஇகா இளைஞர் அணி
November 22, 2025, 11:33 am
கார்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் மூன்று வயது சிறுமி உயிரிழந்தார்: போலிஸ்
November 22, 2025, 11:18 am
மகளை மீட்க போராடும் இந்திரா காந்திக்கு நீதி கிடைக்கக் கோரி ஆயிரக்கணக்கானோர் தலைநகரில் கூடினர்
November 22, 2025, 10:58 am
