செய்திகள் மலேசியா
யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள் குறித்து ஆராய தேவையில்லை; உடனடியாக அமல்படுத்துங்கள்: சிவசுப்பிரமணியம்
கோலாலம்பூர்:
யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள் குறித்து ஆராய தேவையில்லை. உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
மஇகா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் இதனை வலியுறுத்தினார்.
ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வு இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான பிடி 3 தேர்வு மீண்டும் அமல்படுத்தப்படலாம்.
இது குறித்து ஆய்வுகள் நடத்தப்படும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறியுள்ளார்.
கல்வியமைச்சரின் இந்த கருத்தை நான் வரவேற்கிறேன்.
ஆனால் இது குறித்து ஆய்வுகளை நடத்த வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை.
காரணம் இத்தேர்வுகள் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
ஒரு காலக்கட்டத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் யூபிஎஸ்ஆர் தேர்வு அவ்வளவு சிறப்பாக இருக்காது.
இருந்தாலும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் முயற்சியால் யூபிஎஸ்ஆர் தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் 7ஏ பெற்றனர்.
அதே போன்று பிடி 3 தேர்விலும் மாணவர்கள் சிறப்பான தேர்வை பதிவு செய்தனர்.
ஆனால் இத்தேர்வுகள் இல்லாததால் மாணவர்களின் கல்வி திறன் பெரும் சரிவை கண்டுள்ளது.
இதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு வேண்டுமானால் ஆய்வுகளை செய்யலாம்.
அதற்கு பதிலாக தேர்வு வேண்டுமா என்பதற்கு ஆய்வுகள் நடத்துவதை விட உடனடியாக தேர்வுகளை அமலுக்கு கொண்டு வர வேண்டும்ம்
மஇகா கல்விக் குழு உறுப்பினருமான சிவசுப்பிரமணியம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 10, 2026, 1:46 pm
துன் டாக்டர் மகாதீர் இடுப்பு எலும்பு முறிவிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம்: செயலாளர் அறிக்கை
January 10, 2026, 12:30 pm
3 பிரபலமான அரசு சாரா நிறுவனங்கள் எம்ஏசிசி கண்காணிப்பில் உள்ளன: டான்ஸ்ரீ அஸாம் பாக்கி
January 10, 2026, 12:10 pm
அழிவின் விளிம்பில் மலாயா புலிகள்; அவற்றை காப்பாற்றுங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
January 10, 2026, 11:34 am
புதிய மாற்றங்களுடன் பத்துமலை ஆற்றங்கரை பக்தர்களுக்கு தயார் நிலையில் இருக்கும்: டான்ஸ்ரீ நடராஜா
January 10, 2026, 10:45 am
பாப்பான் நகர சமூக வளர்ச்சிக்கு RM8,000 நிதியுதவி: பத்து காஜா எம்.பி சிவக்குமார் வழங்கினார்
January 10, 2026, 10:12 am
நம்பிக்கை, ஒத்துழைப்பால் மலேசியா, துருக்கி இடையிலான உறவுகள் வலுப் பெற்றுள்ளன: பிரதமர் அன்வார்
January 10, 2026, 10:08 am
அம்னோ தலைவர்கள் கோழைகளாக இருக்க வேண்டாம்: ஜைட் இப்ராஹிம்
January 10, 2026, 9:37 am
பத்துமலை மின் படிக்கட்டு சர்ச்சை; இந்து ஆலயங்களின் பதிவைத் தவறாகப் புரிந்துகொண்டதின் விளைவா?: இராமசாமி
January 9, 2026, 10:58 pm
