செய்திகள் மலேசியா
பிரதமர் 250,000.00 ரிங்கிட் மானியம்: சீரமைக்கப்பட்ட தஞ்சோங் ரம்புத்தான் அருள்மிகு சமயப்புர மகா மாரியம்மன் கோவில் திருமண மண்டபம் திறப்பு விழா கண்டது
ஈப்போ:
இங்குள்ள தஞ்சோங் ரம்புத்தான் அருள்மிகு சமயபுர மகா மாரியம்மன் கோவிலின் மறுசீரமைப்பு செய்யப்பட்ட திருமண மண்டபம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க அழைப்பு வழங்கிய ஆலய நிர்வாகத்திற்கு பிரதமரின் நன்றியை கூறினார் தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் சிறப்பு மேலதிகாரி ஆர்.சுரேஸ் குமார்.
கடந்த 1972 ல் உருவாக்கப்பட்ட இந்த திருமண மண்டபம் பல வரலாற்றுப் பதிவுகளை கொண்டுள்ளது. இம்மண்டபத்தின் நிலைப்பாடு குறித்து ஆலயத்தலைவர் முருகையா மற்றும் அவர் தம் நிர்வாகத்தினர் தெளிவான விளக்கமளித்தனர். இம்மண்டபம் பழுதடைந்து விட்டதால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதன் பின், இவ்விவகாரம் பிரதமரின் பார்வைக்கு கவனத்திற்கு கொண்டு சென்று இம் மண்டபத்தை மறுசீரமைப்பு செய்ய 250,000.00 ரிங்கிட் மானியமாக கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டார். அதனைத்தொடர்ந்து இம்மண்டப சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டதாக அவர்குறிப்பிட்டார்.
இனிவரும் காலங்களில் இம்மண்டத்தின் வாயிலாக இவ்வாலய நேர்வாகத்தினர் தங்கள் வருவாயைப் பெருக்கிக்கொள்ள முடியும். இவ்வட்டாரத்தில் இந்த ஆலய மண்டபத்தை இங்குள்ள இந்தியர்கள் பயன்படுத்திக்கொள ள ஏதுவாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த தம்புன் நாடாளுமன்ற ்தொகுதியில் ஆலயங்கள் மற்றும் ஐந்து தமிழ்ப்பள்ளிகளுக்கு வற்றாத உதவிகள் பிரதமர் தரப்பினர் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். குறிப்பாக, தம்புன் தொகுதியிலுள்ள ஐந்து தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டிற்கு பதிவு செய்யும் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசமாக வழங்க நாடாளுமன்ற தொகுதி தரப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர் என்று அவர் கருத்துரைத்தார்.
அதுமட்டுமின்றி, அடுத்த வாரம் கிளேபாங்கில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் முதல் கட்டமாக 600 மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிக்கு போகலாம் திட்டத்திற்கு மாணவர்களின் தேவைக்கு ஏற்ப உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த திருமண மண்டபம் மழை காலங்களில் சேதமடைச்த கூரையினால் மழை நீர் ஒழுக தொடங்கியது. இதனால் பல சவால்களையும் அசெளகரியங்களும் எதிர்நோக்கினோம். அதன் பின் இவ்வாலயத்தின் முன்னாள் தலைவர் குணசேகரனின் புதல்வர் டாக்டர் இந்திரன் சேனா இம்மண்டபத்திற்கு நேரடியாக வருகையளித்து மண்ட கூரையை மாற்றுவதற்கு 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கி உதவியாக ஆலயத் தலைவர் முருகையா சுப்பிரமணியம் கூறினார். இவ்வேளையில் அக்குடும்பத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
February 2, 2026, 2:17 pm
காரில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக 2 ஆண்கள் கைது: போலிஸ்
February 2, 2026, 1:28 pm
ஆலயம் தொடர்பான சர்ச்சைகளில் மோதல்கள் முஸ்லிம்களின் வழி அல்ல: ஃபஹ்மி
February 2, 2026, 1:22 pm
குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டை ஒரு முக்கியமான தேசியப் பிரச்சினையாகக் கருத வேண்டும்: சார்லஸ்
February 1, 2026, 8:46 pm
பத்துமலையின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு துணையாகவும் ஆதரவாகவும் இருப்பேன்: கோபிந்த் சிங்
February 1, 2026, 8:45 pm
பத்துமலையின் மேம்பாட்டிற்காக இறுதி மூச்சு வரை உழைப்பேன்: டான்ஸ்ரீ நடராஜா
February 1, 2026, 8:44 pm
டத்தோ ரெனா இராமலிங்கம் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்
February 1, 2026, 10:49 am
