செய்திகள் தமிழ் தொடர்புகள்
நாடாளுமன்ற வக்ஃபு கூட்டுக் குழுவின் 10 எம்பிகள் இடைநீக்கம் ஒரு ஜனநாயக படுகொலை: ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை:
இன்று நடைபெற்ற வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆ. ராசா, கல்யாண் பானர்ஜி, முஹம்மது ஜாவேத், அசாதுதீன் ஓவைசி, நசீர் ஹுசைன்,மொஹிபுல்லா, முஹம்மது அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதீம்-உல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஒரு ஜனநாயக படுகொலை என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
வஃக்பு சட்டத்திருத்த மசோதாவின் கூட்டுக் குழு, இரண்டு அவைகளிலும் சேர்த்துமொத்தம் 31 உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்டது. மக்களவைக்கு 21 மற்றும் மாநிலங்களவைக்கு 10 உறுப்பினர்கள் இடம் இடம்பெற்றனர்.
கூட்டுக்குழுவின் 31 உறுப்பினர் களில் பாஜக 11, அதன் கூட்டணிகள் 5 என 16 எம் பிக்கள் உள்ளனர். நியமன எம்பிக்கள் 2 என அரசுக்கு ஆதரவாக மொத்தம் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.
கூட்டுக்குழு நாடு முழுவதும் பயணம் செய்து பல தரப்பினருடமிருந்தும் ஆலோசனைகளை பெற்றது. இவற்றை ஆய்வு செய்ய தங்களுக்குபோதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் குரல் எழுப்பிய நிலையில் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
டில்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அரசியல் ஆதாயம் கருதி வக்பு திருத்தச் சட்டம் மசோதாவை உடனடியாக அமல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு முயன்று வருவது தெளிவாகிறது.
சிறுபான்மையினர்கள் உரிமையைப் பறிப்பதிலும் சிறுபான்மையினர் நலனில் அக்கறைகொண்டு செயலாற்றுபவர்களை ஒடுக்குவதிலும் ஒன்றிய அரசு முதன்மையாகச் செயல்படுகிறது.
நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சியின்சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று
பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
February 16, 2026, 12:01 am
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸார் கைது
February 14, 2026, 10:17 am
சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர் சிராஜ் உயிரிழந்தார்
February 14, 2026, 10:01 am
வலைதள அறிவரங்கம்: மஜகவின் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடலில் உற்சாகம்
February 14, 2026, 9:44 am
நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாநாட்டுக்கு வரும்படி வீடுவீடாக சென்று அழைப்புவிடுக்கும் சீமானின் தாயார்
February 10, 2026, 12:32 pm
தமிழக தேர்தல் பரபரப்பு: 71 புதிய மாவட்டத் தலைவர்களை ராகுல் காந்தி திடீரென டெல்லிக்கு அழைத்திருக்கிறார்
February 9, 2026, 11:49 am
ரூ. 9,000 கோடியில் டாடா மோட்டாா்ஸ் காா் தொழிற்சாலையை பனப்பாக்கத்தில் முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்
February 9, 2026, 9:04 am
எந்த முறைகேட்டை மறைக்க TNPSC தேர்வு ரத்தானது?: தவெக தலைவர் விஜய் கேள்வி
February 8, 2026, 6:34 pm
கடும் பனிமூட்டத்தினால் சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு: திருப்பி அனுப்பப்பட்ட 7 விமானங்கள்
February 8, 2026, 3:19 pm
