
செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்தியாவில் 5 குழந்தைகளுக்கு HMP வைரஸ்: தமிழகத்தில் இருவர் பாதிப்பு
சென்னை:
தமிழகத்தில் இருவருக்கும், கர்நாடகம், குஜராத்தில் மூவருக்கும் என 5 குழந்தைகளுக்கு HMP வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் HMP வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது இது பல்வேறு நாடுகளுக்கு அதிக அளவில் பரவி வருகிறது. இந்தியாவில் 5 குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பாதிக்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது. மற்றொரு 8 மாத ஆண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக் குழந்தைகள் சர்வதேசப் பயணம் ஏதும் மேற்கொள்ளவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
குஜராத்தில் பிறந்து இரண்டு மாத ஆண் குழந்தைக்கு HMP வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தில் இரு குழந்தைகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 2001 முதல் தமிழகத்தில் நிலவி வரும் சாதாரண வைரஸ் தொற்றுதான் என்று . ஓய்வு, நீர்ச்சத்தைத் தக்க வைக்கும் சிகிச்சைகளை மேற்கொண்டால் இந்த பாதிப்பு சரியாகிவிடும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 12:39 pm
விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் அவசர ஆலோசனை
October 14, 2025, 12:44 pm
சிபிஐ விசாரணையை விட விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ நல்லாருக்கும்: சீமான் நக்கல்
October 11, 2025, 9:34 pm
திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
October 10, 2025, 3:25 pm
விஜய் பிரசாரத்துக்கு 60 டிரோன்கள் கொண்டு வரப்பட்டது ஏன்?: மாவட்ட செயலாளர் மதியழகனிடம் போலீசார் விசாரணை
October 8, 2025, 10:24 pm
காஸா இனப் படுகொலைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
October 6, 2025, 10:30 pm
ராமதாஸை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
October 6, 2025, 9:20 pm
ரேஸ் காரில் தமிழக அரசின் லோகோ ஏன்?: அஜித் குமார் விளக்கம்
October 5, 2025, 4:48 pm
இருமல் மருந்தால் பறிபோன 10 குழந்தைகளின் உயிர்: மருத்துவர் கைது
October 4, 2025, 9:36 pm
விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன்
October 4, 2025, 8:05 pm