செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்தியாவில் 5 குழந்தைகளுக்கு HMP வைரஸ்: தமிழகத்தில் இருவர் பாதிப்பு
சென்னை:
தமிழகத்தில் இருவருக்கும், கர்நாடகம், குஜராத்தில் மூவருக்கும் என 5 குழந்தைகளுக்கு HMP வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் HMP வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது இது பல்வேறு நாடுகளுக்கு அதிக அளவில் பரவி வருகிறது. இந்தியாவில் 5 குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பாதிக்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது. மற்றொரு 8 மாத ஆண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக் குழந்தைகள் சர்வதேசப் பயணம் ஏதும் மேற்கொள்ளவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
குஜராத்தில் பிறந்து இரண்டு மாத ஆண் குழந்தைக்கு HMP வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தில் இரு குழந்தைகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 2001 முதல் தமிழகத்தில் நிலவி வரும் சாதாரண வைரஸ் தொற்றுதான் என்று . ஓய்வு, நீர்ச்சத்தைத் தக்க வைக்கும் சிகிச்சைகளை மேற்கொண்டால் இந்த பாதிப்பு சரியாகிவிடும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 10:41 am
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்றிரவு லண்டன் புறப்படுகிறார்
September 9, 2026, 10:04 pm
தவெக தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயமானது
September 9, 2026, 1:23 pm
22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு
September 7, 2026, 10:06 pm
இனிமேல் பெண்களப் பற்றி அசிங்கமாகப் பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்: பேரவையில் முதல்வர் விஜய் எச்சரிக்கை
September 5, 2026, 10:07 pm
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை நிலையம்
September 3, 2026, 3:14 pm
சென்னை விமான நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் மதிப்புடைய 3.45 கிலோ கஞ்சா கடத்த முயற்சி: மலேசிய ஆடவர் கைது
September 3, 2026, 2:07 pm
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
September 2, 2026, 2:55 pm
