
செய்திகள் இந்தியா
கும்பகர்ணனைப் போல உறக்கத்தில் உள்ளது ஒன்றிய அரசு: ராகுல்
புது டெல்லி:
அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வால் நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு கும்பகர்ணனைப் போல உறக்கத்தில் உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.
தில்லியில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு குடும்பத் தலைவிகளுடன் உரையாடினார். இந்த விடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு கூறியுள்ளதாவது:
விலைவாசி உயர்வு எந்த அளவுக்கு மக்களை பாதித்து வருகிறது என்பதை மக்களிடம் கேட்டு நேரடியாகத் தெரிந்து கொண்டேன். விலைவாசி உயர்வால் மக்கள் பொருள்களை வாங்கும் அளவு குறைவது சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் பாதித்து வருகிறது.
உணவு தொடர்பான தங்கள் குழந்தைகளின் சிறிய ஆசைகளைக் கூட மக்களால் நிறைவேற்றித் தர முடியாத நிலை உள்ளது. காய்கறி வாங்கும் அளவைக் குறைத்துக் கொண்டதாகவும், பழங்கள் வாங்குவதே இல்லை என்றும் குடும்பத் தலைவிகள் பலர் என்னிடம் தெரிவித்தனர்.
எளிய மக்களால் சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை என்றால் எப்படி அவர்கள் எதிர்காலத் தேவைகளுக்காக சேமிக்க முடியும்.
நாட்டில் ஒரு பக்கம் வேலையின்மையும், ஊதியம் உயராமல் இருப்பதும் மக்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. மறுபுறம் விலைவாசி உயர்வு வாட்டி வதைக்கிறது. இதற்கு தீர்வுகாண முயலாமல் மத்திய அரசு கும்பகர்ணனைப் போல உறங்கி வருகிறது என்று ராகுல் கூறியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm