
செய்திகள் இந்தியா
யூடியூபரின் முயற்சியால் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பிய பெண்
புது டெல்லி:
துபாயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய பெண் ஹமிதா பானு, 22 ஆண்டுகள் கழித்து ஒரு யூடியூபரின் முயற்சியால் சொந்தங்களிடம் திரும்பியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த ஹமிதா பானுவை 2002ஆம் ஆண்டு முகவர் ஒருவர் துபையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் மாவட்டத்துக்கு அனுப்பியுள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து வெளியேற முடியாமல் அந்நாட்டிலேயே தங்கிவிட்ட ஹமிதா பானு, கராச்சியைச் சேர்ந்த ஒரு பாகிஸ்தானியரை மணந்துள்ளார். அவரும் அண்மையில் கொரோனாவில் இறந்துவிட, வளர்ப்பு மகனுடன் ஹமிதா பானு வசித்து வந்தார்.
2022இல் யூடியூபரான வலியுல்லா மரூஃப், ஹமிதா பானு குறித்த விடியோ செய்தியை சமூக ஊடகத்தில் பதிவேற்றினார்.
இதைப் பார்த்து இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினர் ஹமிதா பானுவுடன் தொடர்பு கொண்டனர். பின்னர் வாகா எல்லை வழியாக அவர் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm