செய்திகள் மலேசியா
431 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: ஆஸ்திரேலியாவில் மலேசிய பிரஜை கைது
கோலாலம்பூர்:
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மலேசிய பிரஜை ஒருவரை ஆஸ்திரேலிய காவல்துறை கைது செய்துள்ளது. அவர் சுமார் 431 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளை ஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதான் ஆஸ்திரேலிய காவல்துறையால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களில் மிக விலைமதிப்புள்ளது எனக் கூறப்படுகிறது. கைதான மலேசியரின் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் இதுவரை வெளியிடப்படவில்லை.
நேற்று வெள்ளிக்கிழமையன்று கப்பல் மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
டைல்ஸ் உள்ளிட்ட பொருள்களுடன் அந்தப் போதைப் பொருளும் அனுப்பப்பட்டிருந்தது என்றும், மெல்பெர்ன் நகரில் உள்ள முகவரி குறிப்பிடப்பட்டு இருந்தது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தங்கள் நாட்டில் உள்ள சட்டப்படி சம்பந்தப்பட்ட அந்த நபரைப் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை என்றும், மலேசிய காவல்துறையிடம் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆஸ்திரேலிய காவல்துறை கூறியுள்ளது.
"இந்த குற்றச்செயலின் பின்னணியில் உள்ள கும்பலைப் பற்றிய விசாரணை நடந்து வருகிறது. இத்தகைய குற்றங்கள் மூலம் அந்தக் கும்பல் பல மில்லியன் டாலர்களை சம்பாதிப்பதுடன் இரு நாடுகளின் குடிமக்களுக்கும் கேடு விளைவிக்கிறது.
"இது தொடர்பாக ஆஸ்திரேலிய, மலேசிய காவல்துறைகள் இணைந்து செயல்படும். கப்பல் மூலம் தற்போது வந்திறங்கிய ஹெராயின் போதைப் பொருளைக் கைப்பற்றாமல் போயிருந்தால் 225 மனித உயிர்களை இழக்க நேரிட்டிருக்கும்," என்று ஆஸ்திரேலிய கூட்டரசு காவல்துறையின் தெற்கு பிரிவு ஆணையர் கிரிஸ்ஸி பேரட் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு இரண்டு கிலோ ஹெராயின் பயன்பாடு காரணமாக ஒருவர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
April 20, 2024, 2:54 pm
பாலர் பள்ளி, உயர்கல்வி மாணவர்கள், சிறுநீரக நோயாளிகளுக்கு மித்ரா நிதி வழங்கப்படும்: பிரபாகரன்
April 20, 2024, 2:42 pm
சாலையோரத்தில் சுயநினைவின்றி கிடந்த தாதியர்; நெகிரி செம்பிலானில் பரபரப்பு
April 20, 2024, 2:04 pm
ஆதரவு அளித்தால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்ற எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை: பிரதமர்
April 20, 2024, 12:34 pm
விளையாட்டுப் போட்டிகளின் வாயிலாகவே ஒற்றுமையை வலுப்படுத்த முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
April 20, 2024, 12:32 pm
ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை டத்தோஸ்ரீ சரவணன் தொடக்கி வைத்தார்
April 20, 2024, 12:08 pm
கோல குபு பாருவில் வேட்பாளரை வெற்றி பெற ஒற்றுமை அரசாங்கம் சரியான வழிமுறையைக் கொண்டுள்ளது: ஜாஹித்
April 20, 2024, 11:20 am
கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் மசீச பரப்புரை மேற்கொள்ளாது
April 20, 2024, 11:16 am
மேற்கு ஆசியாவில் அரசியல் நெருக்கடி; மலேசியா நிலைமையைக் கண்காணித்து வருகிறது
April 20, 2024, 11:14 am