செய்திகள் இந்தியா
நாடாளுமன்ற வளாகத்தில் மோடி, அதானி வேடமிட்டு எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
புதுடெல்லி:
அதானி லஞ்சம் கொடுத்தது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடக்கி உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் கார்கே உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர்.
அப்போது மோடி, அதானி கூட்டு, எங்களுக்கு நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தில் ேமாடி, அதானி வேடமிட்ட எம்பிக்களிடம் ராகுல்காந்தி பேட்டி எடுத்தார். அதானி முகமூடி அணிந்த எம்பியிடம்,’ நாடாளுமன்றம் செயல்பட ஏன் அனுமதிக்கவில்லை?’ என்று ராகுல் கேட்டார்.
அதற்கு அவர்,’ அமித்ஷாவிடம் கேட்க வேண்டும். அவரை இங்கே காணவில்லை’ என்றார். இதை தொடர்ந்து உங்கள் இருவருக்கும்(மோடி, அதானி) இடையே உள்ள உறவு எப்படி இருக்கிறது? என்று கேட்டார்.
அதற்கு அந்த எம்பிக்கள்’ நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்’ என்று பதில் அளித்தார்கள். மேலும் அதானி முகமூடி அணிந்த எம்பி, மோடி முகமூடி அணிந்த எம்பியை காட்டிக் கூறுகையில்,’ நான் என்ன சொன்னாலும், விரும்பியதை அவர்(மோடி) செய்கிறார். அது விமான நிலையமாக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் சரி’ என்றார்.
அப்போது ராகுல்,’ மோடி ஏன் மவுனமாக இருக்கிறார்?’ என்று கேள்வி எழுப்ப, அதற்கு அதானி வேடமிட்ட எம்பி,’ இந்த நாட்களில் இவர் டென்ஷனில் இருக்கிறார்’ என்று கூறினார். அதை தொடர்ந்து,’ உங்கள் அடுத்த திட்டம் என்ன, இப்போது என்ன வாங்க முடிவு செய்து இருக்கிறீர்கள்’ என்று ராகுல் கேட்டதற்கு, அதானி முகமூடி அணிந்திருந்த காங்கிரஸ் எம்.பி., ‘நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை, இன்று மாலை ஒரு சந்திப்பு உள்ளது’ என்றார்.
இதில், சப்தகிரி சங்கர் உலாகா பிரதமர் மோடி முகமூடியையும், மாணிக்கம் தாகூர் அதானி முகமூடியையும் அணிந்திருந்தனர். எதிர்க்கட்சி எம்பிக்களின் இந்த போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 24, 2025, 8:54 pm
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இரு புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி
December 22, 2025, 12:29 pm
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி ஊா்வலம் நாளை செவ்வாய்க்கிழமை புறப்படுகிறது
December 21, 2025, 11:30 am
இந்தியாவில் விரைவு ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன: 5 பெட்டிகள் தடம் புரண்டன
December 20, 2025, 5:08 pm
பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலி
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
