செய்திகள் இந்தியா
விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் கொடூர கொலை
புது டெல்லி:
தில்லி - ஹரியாணா எல்லை அருகே விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில் மணிக்கட்டுகள் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் போலீஸாரின் தடுப்பு வேலியில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ஹரியாணா மாநிலம் போலீஸார் கூறியதாவது:
கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியின் சிங்கு, டிக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் 10 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தில்லி - ஹரியாணா எல்லைக்கு அருகில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் சிங்குவின் குண்ட்லி பகுதியில் ஆண் சடலம் இருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸாரின் தடுப்பு வேலியில் தொங்கவிடப்பட்டிருந்த சடலத்தை மீட்க முயன்றனர். ஆனால் அங்கிருந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
விசாரணையில் கொல்லப்பட்ட நபர் பஞ்சாப் மாநிலம் தரன் தாரன் பகுதியைச் சேர்ந்த லக்பீர் சிங் (35) என்பது தெரியவந்தது.
சீக்கிய மதத்தின் புனித நூலான சர்ப்லோ கிரந்தத்தை லக்பீர் சிங் அவமதிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மதத்தின் நிஹாங் பிரிவைச் சேர்ந்த சிலர் லக்பீர் சிங்கை கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அதனை அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm
மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி
October 23, 2025, 8:10 am
பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
October 22, 2025, 10:16 pm
ஆர்எஸ்எஸ் - பாஜக முக்கியத்துவம் பெற்றால் கேரளம் என்னாகும்?: முதல்வர் பினராயி விஜயன் கேள்வி
October 22, 2025, 10:09 pm
வேட்பாளர்களை மிரட்டுகிறது பாஜக: பிரசாந்த் கிஷோர்
October 22, 2025, 10:04 pm
தீபாவளி போனஸ் தராததால் சுங்கச்சாவடியை திறந்துவிட்ட ஊழியர்கள்
October 21, 2025, 10:18 pm
இந்துக்கள் அல்லாதவர்கள் வீட்டுக்கு சென்றால் காலை உடையுங்கள்: பிரக்யா தாக்குர்
October 20, 2025, 9:47 pm
ரயில் நிலையத்தில் ஜி பே செயல்படாததால் வாட்சை பறித்துக்கொண்ட சமோசா விற்ற நபர்: வீடியோ வைரலானதால் கைது
October 20, 2025, 10:40 am
