
செய்திகள் இந்தியா
மகாராஷ்டிர அதிகார போட்டி முடிவுக்கு வந்தது: முதல்வர் பட்னவீஸ், 2 துணை முதல்வர்கள் பதவியேற்பு
மும்பை:
மகாராஷ்டிரத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த அதிகார போட்டி முடிவுக்கு வந்து முதல்வராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னவீஸ், துணை முதல்வர்களாக சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜீத் பவார் ஆகியோர் பதவியேற்றனர்.
மூவருக்கும் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சிவசேனை கட்சியை உடைத்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த ஷிண்டே, மீண்டும் முதல்வர் பதவியை கேட்டு நிர்பந்தித்தார்.
இதனால் தேர்தல் முடிந்த பின்னரும் சுமார் 15 நாள்கள் இழுபறி நீடித்து வந்தது. பின்னர் இரண்டரை ஆண்டுகால முதல்வர், மகனுக்கு துணை முதல்வர் என பல்வேறு கோரிக்கைகளை ஷிண்டே வைத்ததால் ஆட்சி அமைப்பதில் சிக்கில் நீடித்தது. இதற்கு எதற்குமே பாஜக சம்மதிக்கவில்லை.
இந்நிலையில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜக சார்பாக முதல்வராக பட்னவீஸ், கூட்டணி கட்சிகளான இரு துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார் ஆகியோர் புதன்கிழமை அறிவிக்கப்பட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm