செய்திகள் சிந்தனைகள்
பெருமை அடித்துக் கொண்டிருக்காதீர்கள் - வெள்ளிச் சிந்தனை
சிறுவர் யூசுஃப் (அலை) தாம் கண்ட கனவை தந்தையிடம் கூறினார். அதற்கு தந்தை கூறினார்:
"என் அருமை மகனே! உனது கனவை உன் சகோதரர்களிடம் கூறிவிடாதே! அவ்வாறு கூறினால் அவர்கள் உனக்கு எதிராக சதி செய்ய முற்படுவார்கள்'' (திருக்குர்ஆன் 12:05)
அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் அருட்கொடைகள் குறித்து எல்லோரிடத்திலும் தம்பட்டம் அடிக்காதீர்கள்.
அனைவரிடத்திலும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
ஒரு சிலரின் உள்ளங்களில் பொறாமை இருக்கும்.
ஒரு சிலரின் கண்களில் விஷம் இருக்கும்.
அல்லாஹ் தந்த அருட்கொடைகளுக்காக அவனைப் புகழ்ந்தும், அடுத்தவரிடம் மறைத்தும் அவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அல்லது குறைந்தபட்சம் அனைவரிடமும் சொல்லிக் காட்டி பெருமையடிக்காமலாவது இருங்கள்.
காரணம், அடுத்தவர் அருட்கொடைகள் அகன்று சென்றால்தான் பொறாமைக்காரன் நிம்மதியடைவான்.
சொந்த சகோதரன் கண்ட கனவுக்காக கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளே முற்காலத்தில் பொறாமை கொண்டுள்ளனர்.
அவ்வாறெனில், உங்கள் வருமானம், தொழில், செல்வம் போன்றவற்றில் மக்களிடமிருந்து நீங்கள் பாதுகாப்புப் பெற விரும்புகிறீர்களா...?
எனில், உங்கள் அருட்கொடைகளை அனைவரிடமும் கூறிக் கொண்டிருக்காதீர்கள்.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
May 22, 2026, 9:01 am
படத்தில் உள்ள இரண்டு நெருப்புச் சுடர்களின் வேறுபாட்டை கவனித்தீர்களா?- வெள்ளிச் சிந்தனை
May 14, 2026, 7:30 pm
கேரளத்தின் முதல்வராகிறார் வி.டி.சதீசன்: கேரள அரசியல் ஒரு பார்வை
April 25, 2026, 11:42 am
ஈரானில் மழை பெய்யாமல் மேகங்களை மறைத்து பஞ்சம் கொண்டு வந்த இஸ்ரேலும் அதனைத் தகர்த்த ஈரானும்
April 24, 2026, 7:50 am
வேர் சரியாக இருந்தால் மட்டுமே மரம் நிலைத்து நிற்கும் - வெள்ளிச் சிந்தனை
April 19, 2026, 10:55 pm
தமிழக தேர்தல் களம்: த வெ க வேட்பாளர்கள் வழிகாட்டுதலின்றி தவிக்கும் அவல நிலை
April 18, 2026, 6:27 pm
இதுவரை நடந்தது போதும் - Enough is enough: இஸ்ரேல் மீது டிரம்ப் பாய்ச்சல்
April 17, 2026, 8:11 am
சுய திருப்தியும், தற்பெருமையும் மோசமான குணங்கள் - வெள்ளிச் சிந்தனை
April 16, 2026, 9:55 pm
