செய்திகள் மலேசியா
தேசிய முன்னணியின் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸம்ரி
கோலாலம்பூர்:
தேசிய முன்னணியின் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கிட்டத்தட்ட 5,000 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் இதன்னை கூறினார்.
தேசிய முன்னணியின் 5ஆம் ஆண்டு நிறைவு விழா வரும் டிசம்பர் 7ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் கொண்டாட்டத்தின் தேதி முடிவு செய்யப்பட்டது.
அன்றைய தினம் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 5,000 தேசிய முன்னணியின் உயர்மட்ட, கீழ்மட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
அதே வேளையில் அக்கூட்டத்தில் 17ஆவது சபா மாநில தேர்தலுக்கான தயார் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த தேர்தல் அக்டோபர் 2025க்கு முன் எப்போது வேண்டுமானாலும் நடத்தப்படலாம் என்று ஸம்ரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 6:44 pm
பெருநாள் கொண்டாட்டங்களின் போது அந்நிய நாட்டினர் மீது ஏன் சோதனை நடத்தப்படுகிறது?: ஜைட் இப்ராஹிம்
March 23, 2026, 6:43 pm
கெடாவில் வெப்பம் அதிகரித்து வருகிறது; ஒரு மாதமாக மழை பெய்யவில்லை: மன்சோர் ஜக்காரியா
March 23, 2026, 5:24 pm
சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிய ஷா ஆலம் பகுதியில் அதிரடிச் சோதனை
March 23, 2026, 4:56 pm
பெருமழையில் தவித்த குடும்பத்திற்கு உதவிய போக்குவரத்துத் துறை அதிகாரிகள்
March 23, 2026, 4:28 pm
வெப்பத்தினால் உயிரிழப்பு அபாயம்: பேராசிரியர் டாக்டர் ஷரீஃபா எசாத்தின் எச்சரிக்கை
March 23, 2026, 3:54 pm
பெர்லிஸில் கடும் வறட்சி: அணைக்கட்டு நீர்மட்டம் பெருமளவில் சரிந்துள்ளது
March 23, 2026, 3:14 pm
