செய்திகள் தமிழ் தொடர்புகள்
புதுவையை நோக்கி புயல் நெருங்கி வருகிறது: புதுச்சேரிக்கு இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட்
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு இரண்டு நாட்களுக்கு சிகப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடப்பட்டுள்ளதால், அனைத்து துறை அதிகாரிகளும் பணியில் இருக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படை அழைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
புயல் சின்னம் புதுவையை நோக்கி நெருங்கி வருவதின் காரணமாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேரிடர் மேலாண்மை துறை இணைந்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு பிறகு ஆட்சியர் குலோத்துங்கன் கூறியது: ''நாளை முதல் இரண்டு நாட்கள் புதுவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் புதுச்சேரியில் கனமழை பெய்ய இருப்பதால் அனைத்து துறை அதிகாரிகளும் பாதிப்பு ஏற்படும் தாழ்வான பகுதிகளுக்கு சென்று தங்கள் பணிகளை தொடர உத்தரவிட்டுள்ளேன்.
அனைத்து பாதுகாப்பு மையங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். பொதுப் பணித்துறை, மின்துறை ஆகிய துறைகள் தங்கள் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அரை அமைத்து 24 மணி நேரமும் பொதுமக்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு உடனுக்குடன் செவி சாய்க்க தெரிவித்துள்ளேன்.
மக்கள் கேட்கும் உதவிகளை செய்து தரவும், பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் பால் பாக்கெட் தடையின்றி விநியோகம் செய்ய அந்தந்த துறை அதிகாரிகள் பார்த்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 7:14 pm
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல்
March 14, 2026, 11:45 pm
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு
March 14, 2026, 7:05 pm
பாதுகாப்பற்ற கொள்கலனில் பெட்ரோலை சேமிப்பது அபாயகரமானது: இந்திய அரசு எச்சரிக்கை
March 13, 2026, 4:28 pm
சசிகலாவின் புதிய கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
March 12, 2026, 11:35 am
பிளஸ்-2 மாணவிக்கு நேர்ந்த விபரீதம்: தூத்துக்குடியை உலுக்கிய பாலியல் வன்கொடுமை கொலை
March 12, 2026, 8:52 am
மதுரை விமான நிலையத்திற்கு அனைத்துலக அந்தஸ்து
March 11, 2026, 5:04 pm
