செய்திகள் தமிழ் தொடர்புகள்
மும்பையில் 3ஆவது முறையாக எம்எல்ஏவான தமிழர்
மும்பை:
மும்பையில் சியோன் - கோலிவாடா தொகுதியின் மூன்றாவது முறையாக தமிழகத்தை சேர்ந்த தமிழ்செல்வன் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன், 1980ஆம் ஆண்டுகளில் வேலை தேடி மும்பைக்கு சென்றார். சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் பார்சல் ஒப்பந்ததாரராக இருந்தவர் அவர்.
2008இல் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின்போது பொதுமக்கள் 36 பேரை தைரியத்துடன் மீட்டார்.
இதனால் பிரபலமடைந்த தமிழ்ச்செல்வன், பாஜகவில் இணைந்து மும்பை மாநகராட்சி உறுப்பினர் ஆனார். தமிழர்கள் நிறைந்த தாராவி பகுதியை அடங்கிய சியோன் -கோலிவாடா தொகுதியில் 2014, 2019 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
மூன்றாவது முறையாக போட்டியிட்ட அவர் 7,895 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்ச்செல்வனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த கணேஷ் குமார் தோல்வியடைந்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 7:14 pm
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல்
March 14, 2026, 11:45 pm
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு
March 14, 2026, 7:05 pm
பாதுகாப்பற்ற கொள்கலனில் பெட்ரோலை சேமிப்பது அபாயகரமானது: இந்திய அரசு எச்சரிக்கை
March 13, 2026, 4:28 pm
சசிகலாவின் புதிய கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
March 12, 2026, 11:35 am
பிளஸ்-2 மாணவிக்கு நேர்ந்த விபரீதம்: தூத்துக்குடியை உலுக்கிய பாலியல் வன்கொடுமை கொலை
March 12, 2026, 8:52 am
மதுரை விமான நிலையத்திற்கு அனைத்துலக அந்தஸ்து
March 11, 2026, 5:04 pm
