
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மும்பையில் 3ஆவது முறையாக எம்எல்ஏவான தமிழர்
மும்பை:
மும்பையில் சியோன் - கோலிவாடா தொகுதியின் மூன்றாவது முறையாக தமிழகத்தை சேர்ந்த தமிழ்செல்வன் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன், 1980ஆம் ஆண்டுகளில் வேலை தேடி மும்பைக்கு சென்றார். சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் பார்சல் ஒப்பந்ததாரராக இருந்தவர் அவர்.
2008இல் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின்போது பொதுமக்கள் 36 பேரை தைரியத்துடன் மீட்டார்.
இதனால் பிரபலமடைந்த தமிழ்ச்செல்வன், பாஜகவில் இணைந்து மும்பை மாநகராட்சி உறுப்பினர் ஆனார். தமிழர்கள் நிறைந்த தாராவி பகுதியை அடங்கிய சியோன் -கோலிவாடா தொகுதியில் 2014, 2019 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
மூன்றாவது முறையாக போட்டியிட்ட அவர் 7,895 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்ச்செல்வனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த கணேஷ் குமார் தோல்வியடைந்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 11, 2025, 9:25 am
மாநிலங்களவை தேர்தல் வேட்புமனுக்கள் பரிசீலனை: கமல்ஹாசன் உள்ளிட்ட 6 பேர் போட்டியின்றி தேர்வு
June 10, 2025, 11:33 am
'தூர கிழக்கில் தமிழ் ஆய்வுகள்: கொரியா' நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
June 9, 2025, 4:19 pm
தவெகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரிக்கு கொள்கை பரப்புப் பொதுச் செயலர் பதவி
June 9, 2025, 8:43 am
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
June 8, 2025, 1:16 pm
மலேசியா சுற்றுலாப் பயணி கன்னத்தில் அறைந்த வனத்துறை அதிகாரி: கொடைக்கானலில் பரபரப்பு
June 8, 2025, 12:24 pm