
செய்திகள் இந்தியா
மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் மறுப்பு
லக்கீம்பூர் கெரி:
உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூர் கெரியில் விவசாயிகள் மீது வாகனம் மோதியதால் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் அளிக்க நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
இந்தச் சம்பவத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட சேகர் பாரதியை மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆசிஷ் மிஸ்ராவுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதால் தலைமை மாஜிஸ்திரேட் சிந்தா ராம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார் என்று அரசு தரப்பு மூத்த வழக்குரைஞர் எஸ்.பி. யாதவ் தெரிவித்தார்.
கடந்த 9ஆம் தேதி ஆசிஷ் மிஸ்ராவிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸார் பின்னர் கைது செய்தனர். அவரை மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 11:11 am
‘ஜெய் குஜராத்’ என கோஷமிட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு
July 5, 2025, 11:03 am
இயந்திரப் பதிவேடுகளைத் திருத்தியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீது குற்றச்சாட்டு
July 4, 2025, 6:19 pm
மக்கள் எதிர்ப்பு: பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடையை கைவிட்டது தில்லி BJP அரசு
July 4, 2025, 5:48 pm
அதிவேகமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்
July 3, 2025, 5:21 pm
ஒவ்வொரு இந்தியர் மீதும் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ்
July 3, 2025, 5:00 pm
அடுத்த தலாய்லாமா தேர்வு செய்யப்படுவார்
July 3, 2025, 4:57 pm
உ.பி.யில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை கண்டறிய ஆடையை அவிழ்த்து சோதனை: 6 பேருக்கு நோட்டீஸ்
July 3, 2025, 4:50 pm
நடுவானில் ஸ்பைஸ் ஜெட் ஜன்னல் பிரேம் விலகியது
July 2, 2025, 10:43 pm
இந்தியாவில் RAIL ONE APP தொடக்கம்
July 2, 2025, 10:41 pm