
செய்திகள் இந்தியா
ஏர் இந்தியாவுடன் இணைவதால் கடைசியாக பறக்கும் விஸ்தாரா
டெல்லி:
இந்திய விமான நிறுவனம் விஸ்தாரா, 9 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு இன்று அதன் இறுதி விமானப் பயணத்தை மேற்கொள்கிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் Tata Sons நிறுவனமும் செய்துகொண்ட இணைப்பால் விஸ்தாரா, ஏர் இந்தியாவுடன் இணைந்தது.
விரிவான கட்டமைப்பையும் கூடுதலான விமானங்களையும் கொண்ட ஒரு நிறுவனத்தை அமைக்கும் முயற்சி அது.
விஸ்தாராவின் அனைத்துச் செயல்பாடுகளையும் ஏர் இந்தியா நிர்வகிக்கும்.
விஸ்தாராவின் பயணிகள் விவரங்களை ஏர் இந்தியாவுக்கு மாற்றும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவருகிறது.
உணவு, பரிமாறுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவை இரண்டு நிறுவனங்களின் அம்சங்களை உள்ளடக்கியுள்ளதாக ஏர் இந்தியாவின் பேச்சாளர் கூறினார்.
ஆயினும் விஸ்தாரா விமானத்தில் கிடைக்கும் அனுபவம் மாறாது என்று நிறுவனம் உறுதியளித்தது.
உணவு, சேவை, தரம் ஆகியவற்றில் விஸ்தாராவின் மீது வாடிக்கையாளர்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது. அதன் சேவைகளை நிறுத்த எடுக்கப்பட்ட முடிவு பலருக்கும் வருத்தமளித்தது.
விஸ்தாரா நிறுவனம் சந்தித்த இழப்புகள் காரணமாக அதை ஏர் இந்தியாவுடன் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm