செய்திகள் மலேசியா
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகராப்பூர்வப் பயணமாக எகிப்திற்கு பயணமானார்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகராப்பூர்வப் பயணமாக நான்கு நாட்கள் எகிப்து சென்றுள்ளார்.
மலேசியாவிற்கும் எகிப்து நாட்டிற்கும் இடையிலான அரசத் தந்திர உறவின் முக்கியத்தை இந்தப் பயணம் உணர்த்துவதாக எகிப்துக்கான மலேசியத் தூதர் முஹம்மத் தாரிட் சுஃபியான் தெரிவித்தார்.
எகிப்து அதிபர் Abdel Fattah El-Sisi-யின் அழைப்பின் பேரில் பிரதமர் அன்வார் அங்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பயணம் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகளை ஆராய்வதற்கான ஒருங்கிணைந்த அடிப்படையையும் ஒத்துழைப்பை பன்முகப்படுத்தவும் வலுப்படுத்தவும் வாய்ப்பளிக்கும்.
பிரதமர் இன்று மலேசிய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு எகிப்து சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை பிரதமர் அன்வாரை எகிப்து அதிபர் Abdel Fattah El-Sisi, Al Ittihadiya அரண்மனையில் அதிகாரப்பூர்வ வரவேற்பு விழாவில் வரவேற்கிறார். தொடர்ந்து இருதரப்பு சந்திப்பு நடைபெறும்.
வர்த்தகம் மற்றும் முதலீடு,பாதுகாப்பு, சுற்றுலா, கல்வி மற்றும் மத விவகாரங்கள் ஆகிய துறைகளில் அதிகரித்த ஒத்துழைப்பின் மூலம் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் அமர்வு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹலால் தொழில், சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நீர், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் புதிய ஒத்துழைப்புகளை ஆராய்வது குறித்த விவாவதங்களும் இடம்பெறவுள்ளன.
இரு தலைவர்களும் பரஸ்பர நலன்கள், குறிப்பாக பாலஸ்தீன மோதல்கள் தொடர்பான பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தரிட் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 11:30 am
நாளைக்கு நீ சாகணும்னு நான் ஆசைப்படுறேன்
November 4, 2025, 9:54 am
பள்ளி கழிப்பறையில் மாணவர் மரணம்; முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்: கல்வியமைச்சு
November 4, 2025, 8:00 am
டபள்யூசிஇ திட்டம்: 19 நில உரிமையாளர்கள் இடத்தை காலி செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
November 4, 2025, 7:52 am
மெர்டேக்கா கோபுரம் 118 உலகின் மிகச் சிறந்த உயரமான கட்டிடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
November 3, 2025, 10:11 pm
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தேசிய இறையாண்மையை அச்சுறுத்துகிறது; அன்வார் பதவி விலக வேண்டும்: துன் மகாதிர்
November 3, 2025, 10:09 pm
சிகாமட்டில் 2.7 ரிக்டர் அளவில் பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
November 3, 2025, 10:02 pm
அம்பாங் வழியில் ரயில் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறும் வைரல் வீடியோவை பிரசரனா மறுத்தது
November 3, 2025, 4:12 pm
