செய்திகள் இந்தியா
வக்பு மசோதா கூட்டத்தில் சம்பந்தமில்லாதவர்கள் ஆஜரானதால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
புது டெல்லி:
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் சம்பந்தமில்லாதவர்கள் அழைக்கப்பட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்தக் கூட்டங்களில் கருத்து தெரிவிக்க ஹிந்துக்களுக்காக பணியாற்றும் அமைப்புகள் உள்பட மசோதாவுக்கு சம்பந்தமில்லாத முன்னாள் நீதிபதிகள், பல்வேறு மாநிலங்களின் நிர்வாகிகள் ஆஜரானதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். இதனால் அந்தக் கூட்டங்களில் அவ்வப்போது கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டது.
மேலும் தில்லி முதல்வர் அதிஷியின் ஒப்புதல் இல்லாமல், கூட்டுக் குழுவிடம் தில்லி வக்பு வாரிய நிர்வாகி அஸ்வினி குமார் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்ததற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாஜக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் திமுக எம்.பி. முகமது அப்துல்லா, அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 24, 2025, 8:54 pm
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இரு புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி
December 22, 2025, 12:29 pm
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி ஊா்வலம் நாளை செவ்வாய்க்கிழமை புறப்படுகிறது
December 21, 2025, 11:30 am
இந்தியாவில் விரைவு ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன: 5 பெட்டிகள் தடம் புரண்டன
December 20, 2025, 5:08 pm
பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலி
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
