நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்துத் துறைகளிலும் மலாய் மொழி முதன்மை மொழியாகப் பயன்படுத்த வேண்டும்: ஃபட்லினா சிடேக்

கோலாலம்பூர்:

அனைத்துத் துறைகளிலும் மலாய் மொழி முதன்மை மொழியாகப் ப் பயன்படுத்த வேண்டும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார். 

இதன் வாயிலாக தேசிய மொழியின் பொருளாதார, வணிக மதிப்பை அதிகரிக்க இயலும் என்று அவர் கூறினார். 

பொதுச் சேவை துறையில் மலாய் மொழியின் பங்கை மேம்படுத்த, ஒவ்வொரு அரசு ஊழியரும் மத்திய அரசு, மாநில அல்லது பொது அதிகார மட்டத்தில் அதிகாரப்பூர்வ ஆவணங்களைத் தயாரிப்பதில் தரமான தேசிய மொழியைப் பயன்படுத்த வேண்டும்.

தொழில்துறை வீரர்கள், குறிப்பாக ஒளிபரப்பு ஊடகம், விளம்பரம், நிதி போன்ற தனியார் துறையினர், பயனுள்ள தகவல் விநியோகத்திற்காக நல்ல மலாய் பயன்பாட்டை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset