நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பணம் செலுத்தாததால் காரை எடுக்க வந்த அதிகாரிகள்; கார் கண்ணாடிகளை உடைத்த கார் உரிமையாளர் 

பெட்டாலிங் ஜெயா: 

பணம் செலுத்தாததால் காரை எடுக்க வந்த அதிகாரிகள் முன் கோபமுற்ற பெண்மணி ஒருவர் கார் கண்ணாடியை உடைத்தார். 

இந்த சம்பவம் அடங்கிய காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது 

அதிகாரிகளின் செயல்களுக்கு எதிராக அப்பெண்மணி இவ்வாறு சம்பவத்தில் ஈடுபட்டார். கற்கள், மற்றும் இரும்பு கடப்பாறையைக் கொண்டு காரின் கண்ணாடியை உடைத்து தள்ளினார். 

காரின் உரிமையாளருக்கு காரைச் சேதப்படுத்த  முழு அதிகாரம் இருக்கிறது என்று அவர் அங்குள்ள அதிகாரி ஒருவரிடம் அப்பெண்மணி தெரிவித்திருந்தார். 

சம்பந்தப்பட்ட காருக்கு எட்டு மாதங்களாக அதன் உரிமையாளர் மாத கட்டணங்களை எதுவும் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset