நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழாய் உடைந்ததால் 60,000 வாடிக்கையாளர்கள் நீர் விநியோக தடையை எதிர்கொள்ளலாம்: நெகிரி நீர் நிறுவனம்

சிரம்பான்:

குழாய் உடைந்ததால் 60,000 வாடிக்கையாளர்கள் நீர் விநியோக தடையை எதிர்கொள்ளலாம்.

சைன்ஸ் எனப்படும் நெகிரி நீர் நிறுவனம் இதனை தெரிவித்தது.

சிரம்பான் ஜாலாம் ஜெலுபு பெட்ரோனாஸ் முன்புறம் குழாய் உடைந்தது.

இக்குழாயை மறுசீரமைப்புக்கும் நோக்கில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இதனால் 60,000 வாடிக்கையாளர்கள் நீர் விநியோக தடையை எதிர்நோக்குவார்கள்.

குழாயில் எஞ்சியிருக்கும் தண்ணீரை வெளியாக்கும் பணி, தோண்டும் பணி, ஷீட் பைல் பதிக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், சேதம் சீரமைப்பு பணி 80 சதவீதத்தை எட்டியுள்ளது.

சைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset