நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளி கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு விவகாரத்தில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்: அன்பழகன்

செர்டாங்:

தீபாவளி கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு விவகாரத்தில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

செர்டாங் மாவட்ட போலிஸ்படைத் தலைவர் ஏஏ அன்பழகன் இதனை கூறினார்.

இம் மாத இறுதியில் இந்து மக்கள் தீபாவளியை கொண்டாடவுள்ளனனர்.

இத் தீபத் திருநாளை முன்னிட்டு மக்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதில் மக்கள் பாதுகாப்பு விவகாரத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்கள் வீடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முடிந்தால் அருகில் உள்ள போலிஸ் நிலையங்களில் தகவல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

ஷோப்பிங் நேரங்களில் மக்கள் அதிக நகைகளை அணிவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

பிள்ளைகள் பட்டாசுகளை பாதுகாப்புடன் விளையாட வேண்டும்.

செர்டாங் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற தீபாவளி உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன் இதனை கூறினார்.

தீபாவளி பெருநாளை அனைவருன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். 

இவ்வேளையில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset