நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தான்ஶ்ரீ ஜி. வடிவேலு மரணம்: நம்பிக்கையின் ஆழ்ந்த இரங்கல்

கோலாலம்பூர்:

மலேசிய அரசியலில் நீண்ட அனுபவம் பெற்ற மஇகா முன்னாள் தலைமைச் செயலாளர் மற்றும் மேலவை முன்னாள் தலைவர் (1992-1995) தான்ஶ்ரீ ஜி. வடிவேலு காலமானார்.

அவரின் மறைவு மலேசிய தமிழ் சமூகத்துக்கும் அரசியல் வரலாற்றுக்கும் பேரிழப்பாகும்.

தான்ஶ்ரீ ஜி. வடிவேலு, மேலவைத் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தவர்.

மஇகாவின் மூத்த தலைவராகவும் சமூக மேம்பாட்டில் ஆழ்ந்த பற்றும் உறுதியும் கொண்ட அவர், தன் பணியாற்றும் காலத்தில் அரசியல் மற்றும் சமூகத்துறை வளர்ச்சியில் சிறப்பான பங்களிப்பைச் செய்தார்.

நம்பிக்கை சார்பாக, அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset