செய்திகள் மலேசியா
உறுமி மேள ஊர்வலம்: தீபாவளியை வித்தியாசமாக வரவேற்ற காப்புறுதி நிறுவனங்கள்
கோலாலம்பூர்:
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உறுமி மேளத்துடனும் வண்ணப் பூக்கள் அலங்காரத்துடனும் ஊர்வலம் சென்ற வாகனமொன்றின் காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது.
அந்த வாகனத்தில் "தீபாவாளி வாழ்த்துகள்" என்ற வண்ண எழுத்துகளின் ஒளியூட்டும் இருந்தது.
தனியார் காப்புறுதி நிறுவனங்கள் மேற்கொண்ட அந்த முயற்சியை மலேசியர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
"அன்பைப் பகிர நல்ல யோசனை. அருமையான தீபாவளிக் கொண்டாட்டம் எனப் பொது மக்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துகளுக்கு இடையே உறுமி மேளம் பொதுவாகத் திருவிழாக்களில்தான் இசைக்கப்படும் என்பதால் தீபாவளி உணர்வைக் கொண்டுவர நாதஸ்வரம் இசைக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்தும் பதிவிடப்பட்டிருந்தது.
ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த முயற்சியை ஆதரித்திருந்தது அவர்கள் பதிவிட்ட கருத்துகளில் காண முடிந்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 19, 2024, 6:48 pm
போர்ட் கிள்ளான் இந்திய முஸ்லிம் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
October 19, 2024, 3:54 pm
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் வீட்டுக்காவல் மசோதா தாக்கல் செய்யப்படும்: சைஃபுடின் நசுத்தியோன்
October 19, 2024, 2:47 pm
ஜாலான் ஈப்போ ஸ்ரீ மஹா முனிஸ்வரர் ஆலயத்தின் 68-ஆம் ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது
October 19, 2024, 12:10 pm