செய்திகள் மலேசியா
பட்ஜெட்டின் போது திருக்குறளைத் தேடிய பிரதமர் அன்வார்: நாடாளுமன்றத்தில் சிரிப்பலை
கோலாலம்பூர்:
2025ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலின் போது திருக்குறளை மேற்கொள்காட்டிய பிரதமர் அன்வார், அதனை தேடிய போது நாடாளுமன்றத்தில் சற்று நேரம் சிரிப்பலை எழுந்தது
திருக்குறளைப் பற்றி அறிமுகம் செய்துவிட்ட பிரதமர் அன்வார் அதை ஒப்புவிக்க அறிக்கையைத் தேடினார். ஆனால் அறிக்கையோ கிடைக்கவில்லை. இதனால் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடியிடம் உதவி கேட்டு அவரும் தேடி தந்தார் பிறகு, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்,
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு (குறள் 734)
எனும் குறளை ஒப்புவித்தார். பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும் என்று பிரதமர் பொருள் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2024, 5:25 pm
2025ஆம் ஆண்டு பட்ஜெட்: விற்பனை சேவை வரி ( எஸ்.எஸ்.டி) தரம் உயர்த்தப்படும்: பிரதமர் அன்வார்
October 18, 2024, 5:22 pm
அரிசி, பால் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விற்பனை வரி விதிக்கப்படாது: பிரதமர் அன்வார்
October 18, 2024, 5:20 pm
2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்: மலேசிய இந்தியர்களுக்காக 130 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு
October 18, 2024, 4:12 pm
2025ஆம் ஆண்டுக்ககான வரவு செலவு திட்டம்: நேரடி நிலவரங்கள் (LIVE)
October 18, 2024, 3:40 pm
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் உடல் நிலையில் முன்னேற்றம்: ஐ.ஜே.என் தகவல்
October 18, 2024, 3:37 pm