செய்திகள் விளையாட்டு
முதல் தகுதி சுற்றுப் போட்டி: சென்னை – டெல்லி அணிகள் இன்று பலபரீட்சை
துபாய்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று போட்டிகள் நேற்று முன் தினம் முடிவடைந்தன. போட்டிகளின் முடிவில், முதல் 4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
மற்ற அணிகளான நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் வெளியேறின. இந்நிலையில், இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று போட்டி, இன்று நடக்கிறது.
இதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது. சென்னை அணி, கடைசியாக சந்தித்த 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி இருக்கிறது.
இதனால் இன்றைய போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும். டெல்லி அணி, லீக் சுற்று போட்டியில் இரண்டு முறையும் சென்னையை புரட்டி எடுத்திருக்கிறது என்பதால் இன்று அதே தெம்புடன் விளையாடும்.
சென்னை அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், பாப் டு பிளிஸ்சிஸ் சிறப்பான தொடக்க தருகின்றனர். இவர்கள் சொதப்பினால் அடுத்து வரும் வீரர்களும் தடுமாறுகின்றனர். மிடில் வரிசையில் சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, ராயுடு, தோனி என அனைவரும் பேட்டிங்கில் தடுமாறுகின்றனர்.
கடைசிகட்டத்தில் ஜடேஜா மிரட்டுகிறார். பந்துவீச்சிலும் சில போட்டிகளில் சிறப்பாகவும் சில போட்டிகளில் மோசமாகவும் செயல்படுகிறது சென்னை அணி. பழைய தவறுகளில் இருந்து மீண்டால், இன்றைய போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும்.
டெல்லி அணியில் ஷிகர் தவான், பிருத்வி ஷா, கேப்டன் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கில் சிறப்பான பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் அவேஷ்கான், அக்ஷர் பட்டேல், ரபடா, அஸ்வின் மிரட்டுகிறார்கள். இதனால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.
நாளை (11 ஆம் தேதி) சார்ஜாவில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில், புள்ளி பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்த பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேறிவிடும்.
வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், தோல்வி அடையும் அணியுடன் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மோதும். இந்தப் போட்டி 13- ஆம் தேதி நடக்கிறது. இறுதிப்போட்டி 15-ஆம் தேதி துபாயில் நடக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
December 17, 2025, 3:15 pm
சர்ஃபராஸ் கான், மேத்யூ ஷார்ட், மாட் ஹென்றி மூவரையும் ஏலத்தில் எடுத்த சி எஸ் கே
December 17, 2025, 10:32 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகளை பிபா 245 ரிங்கிட்டாகக் குறைத்துள்ளது
December 17, 2025, 10:17 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதியாட்டத்தில் செல்சி
December 16, 2025, 4:50 pm
லியோனல் மெஸ்ஸி இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார்
December 16, 2025, 11:09 am
சிலாங்கூர் கோஜூ காய் கராத்தே சங்கத்தின் வருடாந்திர விருந்துபசரிப்பு: விமரிசையாக நடைபெற்றது
December 16, 2025, 8:38 am
மீண்டும் இந்தியா வருவேன்: லியோனல் மெஸ்ஸி
December 16, 2025, 8:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
December 15, 2025, 4:24 pm
உயிர் பிழைத்தால் போதுமென சென்னை திரும்பினோம்: மெஸ்ஸியை பார்க்க சென்ற சென்னை ரசிகர்கள் வேதனை
December 15, 2025, 9:43 am
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசிய கபடி அணி இரு வெண்கலப் பதக்கத்தை வென்றது
December 15, 2025, 9:42 am
