நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் இடிக்கப்பட்டது

டேராடூன்:

உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்ட மலைப் பகுதியை ஆக்கிரமித்து கட்டிய கோயிலை அரசு அதிகாரிகள் இடித்தனர்.

சுந்தர்துன்கா பனிமலைப் பகுதியில் 14,500 அடி உயரத்தில் யோகி சைதன்ய ஆகாஷ் என்பவரால் திடீரென்று  இந்தக் கோயில் கட்டப்பட்டது.

இதன் அருகே யுனஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட தேவி குண்டம் குளம் உள்ளது. இது பாதுகாக்கப்படும் வனப்பகுதியாகவும் உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்ததால் காவல் துறையினர், மாவட்ட அதிகாரிகள் குழுவினர் அங்கு சென்று சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயில் கட்டடத்தை இடித்தனர். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset