செய்திகள் இந்தியா
சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக 50 மருத்துவர்கள் ராஜினாமா
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக, ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த சுமார் 50 மூத்த மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர். அந்த ராஜிநாமாவை அரசு ஏற்கும் வரை, தாங்கள் பணியாற்றுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக காவல் துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும், மாநில சுகாதாரத் துறையில் நடைபெறும் ஊழலுக்கு முடிவு கட்டவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்கள் மீண்டும் முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 7 இளநிலை மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சுமார் 50 மூத்த மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 10, 2024, 7:27 am
சாதனை சிகரம் ரத்தன் டாடா காலமானார்
October 10, 2024, 5:20 am
டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும் தொழிலதிபருமான ரத்தன் டாட்டா காலமானார்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி
October 9, 2024, 5:36 pm
இந்திய இராணுவ வீரர் ஹிலால் அஹ்மத் பட்-டின் உடல் குண்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது
October 9, 2024, 3:43 pm
மலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் இடிக்கப்பட்டது
October 9, 2024, 12:45 pm
காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல்
October 9, 2024, 12:40 pm
ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி எதிர்பாராதது: மல்லிகார்ஜுன கார்கே
October 8, 2024, 5:39 pm
ஹரியாணாவில் பாஜக முன்னிலை
October 8, 2024, 5:22 pm
போயிங் 737 விமானத்தின் கட்டுப்பாட்டு கருவியில் கோளாறுக்கான வாய்ப்பு
October 8, 2024, 2:34 pm