
செய்திகள் மலேசியா
லங்காவி கேபிள் கார் பராமரிப்பு பணியின் போது கீழே விழுந்த ஆடவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன
லங்காவி:
லங்காவி கேபிள் கார் பராமரிப்பு பணியின் போது கீழே விழுந்த ஆடவரைத் தேடும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
லங்காவி தீயணைப்புப் படையில் இயக்குநர் முகமத் ஜம்ரி அப்துல் கனி இதனை கூறினார்.
இங்குள்ள மச்சின்சாங் மலையில் உள்ள கேபிள் கார் பராமரிப்பு பணியில் 41 வயதுடைய கைருல் நிஷாம் ஈடுப்பட்டு வந்தார்.
அப்போது அவர் தவறி கீழே விழுந்துள்ளார்.
கிட்டத்தட்ட 40 முதல் 50 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் நிலை கண்டறியப்படவில்லை.
மேலும் தீயணைப்பு படையினர் தற்போது அந்த இடத்தில் தேடுதல், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 1:10 pm
கடன் பிரச்சினை காரணமாக ஆடவர் கொலை; தந்தை, மகன் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்
July 8, 2025, 12:22 pm
பெண் பக்தரிடம் காமச் சேட்டை புரிந்த பூசாரிக்கு எதிராக சமூக ஊடங்கங்களில் கடும் கண்டனம்
July 8, 2025, 11:37 am
பிரதமர் அன்வாரின் மூன்று நாடுகளுக்கான அரசு முறை பயணம் பலன் அளித்துள்ளன
July 8, 2025, 11:11 am