செய்திகள் மலேசியா
16ஆவது பொதுத் தேர்தலில் தேமு தனித்து போட்டியிடுவதற்கு நஜிப் விவகாரம் முக்கிய காரணமாக இருக்கலாம்: ஆய்வாளர்
கோலாலம்பூர்:
நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்து போட்டியிடுவதற்கு டத்தோஸ்ரீ நஜிப் விவகாரம் முக்கிய காரணமாக இருக்கலாம்.
நூசாந்தரா அகாடமியைச் சேர்ந்த ஆய்வாளர் அஸ்மி ஹசான் இதனை
தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் மீதான ஜசெகவின் நிலைப்பாடு அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை அதன் சொந்தப் பாதையை எடுக்கத் தள்ளும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
மேலும் நம்பிக்கை கூட்டணியுடன் மீண்டும் இணைந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், தேசிய முன்னணியின் முக்கியக் கட்சியான அம்னோ, கெஅடிலான், அமானாவுடன் நல்லுறவைப் பேண வாய்ப்புள்ளது,
ஆனால் ஜசெகவுடன் வெளிப்படையாக விரோதமாக இருக்கும்.
கெஅடிலான், ஜசெக, அமானா ஆகியவை நநம்பிக்கை கூட்டணியில் கூறுகள்.
நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி ஆகியவை ஒற்றுமை அரசாங்கத்தில் கூட்டாளிகளாக உள்ளன.
இதன் பொருள் இப்போது தேசிய முன்னணி, ஜிஆர்எஸ் இடையேயான உறவைப் போலவே, அம்னோவும் ஜசெகவும் இறுதியில் கூட்டாளர்களாக மாற வேண்டியிருக்கும் என்று அஸ்மி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 26, 2025, 12:00 pm
1 எம்டிபி வழக்கு: அரபு நன்கொடை கடிதம் போலியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது
December 26, 2025, 11:24 am
1 எம்டிபி வழக்கு: நஜிப்பிற்கு ஆதரவாக பிள்ளைகள், அரசியல் தலைவர்கள், ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் கூடினர்
December 26, 2025, 10:26 am
ஜாஹித் ஹமிடியின் இறுதி எச்சரிக்கை ஆணவமானது: மஇகா தலைவர்கள் கண்டனம்
December 26, 2025, 10:25 am
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் குப்பைகளை கொட்டும் அவலம்; நாட்டை அவமானப்படுத்த வேண்டாம்: ங்கா
December 26, 2025, 10:24 am
8 மில்லியன் ரிங்கிட் நிதி நெருக்கடியை மலேசிய கால்பந்து சங்கம் எதிர்கொள்கிறது
December 25, 2025, 10:34 pm
இந்த ஆண்டு 8,006 பேர் எஸ்பிஎம் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்: ஃபட்லினா
December 25, 2025, 10:33 pm
அவதூறான காணொலியை மீண்டும் பகிர்ந்ததற்காக அம்னோ சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஶ்ரீ சஞ்ஜீவன்
December 25, 2025, 7:44 pm
