செய்திகள் மலேசியா
Suriya KLCC மாலில் தீ
கோலாலம்பூர்:
இரவு 8.10 மணியளவில் தீ எச்சரிக்கை ஒலித்ததை அடுத்து, (செப்டம்பர் 29 அன்று) சூரியா KLCC ஷாப்பிங் மாலில் இருந்து நூற்றுக்கணக்கான கடைக்காரர்கள், பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
நாட்டின் அடையாளச் சின்னமான பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள சூரியா மாலின் ஃபுட்கோர்ட்டில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது
KLCC இலிருந்து பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள்.
பார்க்கிங் பகுதிக்கு செல்வதற்கும் மாலுக்குள் நுழைவதற்கும் தடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் குறைந்தது மூன்று தீயணைப்பு இயந்திரங்கள் இருந்தன.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இரவு 8.12 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்ததாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு இருந்த ஒரு குப்பைக் கொள்கலனுக்குள் தீ பற்றியதாக ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இரவு 8.45 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 29, 2024, 10:21 pm
எனது தொழில் ஆசான் வழக்கறிஞர் மதியழகன்: செனட்டர் சரஸ்வதி
September 29, 2024, 9:48 pm
நெகிரி செம்பிலான் மாநில ஜசெக துணைத் தலைவராக குணா தேர்வு
September 29, 2024, 9:34 pm
நாட்டின் மேன்மை மிகு நிலைக்கு கல்வியே உந்து சக்தி: சிவகுமார்
September 29, 2024, 9:23 pm
குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியம்: செனட்டர் சரஸ்வதி
September 29, 2024, 4:14 pm
சுங்கைபூலோவில் 156 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 29, 2024, 3:04 pm
தோழமைக் கட்சிகளின் நிலை குறித்து தேசிய முன்னணி உச்சமன்றம் முடிவெடுக்கும்: டத்தோஸ்ரீ ஜம்ரி
September 29, 2024, 3:01 pm