செய்திகள் மலேசியா
VEP அட்டை இல்லாவிட்டாலும் சிங்கப்பூரர்கள் வழக்கம் போல் மலேசியா வரலாம்: RFID குறியீட்டுக்குப் பதிவு செய்து பொருத்திக்கொள்ளுங்கள்: JPJ அறிவிப்பு
ஜோகூர் பாரு:
அக்டோபர் 1ஆம் தேதி கெடுவுக்குப் பின்னரும் வாகன நுழைவு அனுமதி இன்றி (விஇபி) மலேசியாவுக்குள் நுழையலாம் என அறிவிக்கப்பட்டாலும் சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்கள் ஜோகூரின் டங்கா பேயில் உள்ள டிசிசென்ஸ் மையத்தில் குவிந்திருந்ததை காணமுடிந்தது.
விஇபி (VEP) இல்லாவிட்டாலும் சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்கள் ஜோகூர் வழியாக நுழையலாம் என்று மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) தெரிவித்து இருந்தது.
இருப்பினும், இரண்டு சோதனைச் சாவடிகள் வாயிலாக ஜோகூருக்குள் நுழைந்ததும் ஆர்எஃப்ஐடி (RFID) குறியீட்டுக்குப் பதிவு செய்து அதனைப் பொருத்திக்கொள்ளுமாறும் அந்த ஓட்டுநர்கள் நினைவூட்டப்படுவார்கள் என்று ஓர் அறிவிப்பை விஇபி அமலாக்க முகவை வெளியிட்டது.
அந்த நினைவூட்டலுடன், மலேசியாவை விட்டு வெளியேறும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்படும். விஇபி வில்லையை கூடிய விரைவில் பொருத்த வேண்டும் என்பதே அந்த எச்சரிக்கை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், விஇபி இல்லாமல் ஜோகூருக்குச் செல்லலாம் என்னும் சலுகை மீது நம்பிக்கையின்றி பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள் காணப்பட்டனர்.
வெளிநாட்டு வாகனங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் வாகன நுழைவு அனுமதியைப் பெற்றிருப்பது கட்டாயம் என்று மலேசிய அரசாங்கம் கடந்த மே மாதம் அறிவித்து இருந்தது.
அனுமதி இன்றி நுழையும் வாகனங்களுக்கு 2,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படுவதோடு மலேசியாவுக்குள் நுழைவதற்கான தடையையும் எதிர்நோக்கக்கூடும் என் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 30, 2024, 12:43 am
Suriya KLCC மாலில் தீ
September 29, 2024, 10:21 pm
எனது தொழில் ஆசான் வழக்கறிஞர் மதியழகன்: செனட்டர் சரஸ்வதி
September 29, 2024, 9:48 pm
நெகிரி செம்பிலான் மாநில ஜசெக துணைத் தலைவராக குணா தேர்வு
September 29, 2024, 9:34 pm
நாட்டின் மேன்மை மிகு நிலைக்கு கல்வியே உந்து சக்தி: சிவகுமார்
September 29, 2024, 9:23 pm
குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியம்: செனட்டர் சரஸ்வதி
September 29, 2024, 4:14 pm
சுங்கைபூலோவில் 156 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 29, 2024, 3:04 pm
தோழமைக் கட்சிகளின் நிலை குறித்து தேசிய முன்னணி உச்சமன்றம் முடிவெடுக்கும்: டத்தோஸ்ரீ ஜம்ரி
September 29, 2024, 3:01 pm