நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மிரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் இணக்கம் 

கூச்சிங்: 

மிரி விமான நிலைய விரிவாக்கத்திற்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்தார் 

விமான நிலையத்தில் அதிகப்படியான பயணிகள் விமான சேவைகளைப் பயன்படுத்துவதால் அதன் விரிவாக்கத்தை மேம்படுத்த இந்த இணக்கம் வழங்கப்படுவதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்தார் 

கடந்தாண்டை காட்டிலும் தற்போது 90 விழுக்காடு வரை இந்த விமான நிலையத்தை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். 

இந்த விவகாரத்திற்கு முழு கவனம் செலுத்தப்பட்டு போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக்  தமக்கு விளக்கம் அளித்ததாகவும் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார். 

முன்னதாக, மடானி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியைச் சரவாக் மாநிலத்தில் தொடக்கி வைத்த நிலையில் பிரதமர் மேற்கண்ட விபரங்களைச் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

பகிர்

September 30, 2024, 12:43 am

Suriya KLCC மாலில் தீ

+ - reset